ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன்

ஒரு மார்க்க அறிஞர் ஒரு விஷயத்தில் பிழையான தீர்ப்பைச் சொன்னால், அதை மற்றவர்களிடம் சொல்லிக் கேட்பது (விமர்சிப்பது) புறமாகு

மார்க்க அறிஞர் பிழையான தீர்ப்பு புறம் விமர்சனம்

← முந்தையஅடுதது →
கேள்வி
ஒரு மார்க்க அறிஞர் ஒரு விஷயத்தில் பிழையான தீர்ப்பைச் சொன்னால், அதை மற்றவர்களிடம் சொல்லிக் கேட்பது (விமர்சிப்பது) புறமாகுமா?
பதில்
பதில்:

மார்க்கத்தோடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஒருவர் பிழையான தீர்ப்பைச் சொல்லும்போது, அந்தத் தீர்ப்பை இன்னார் இப்படிச் சொன்னார், இது மார்க்கத்தில் கூடுமா கூடாதா? என்று மற்றவர்களிடம் கேட்பதோ, விமர்சிப்பதோ, விளக்கம் கேட்பதோ எந்த வகையிலும் புறமாக ஆகாது.

இது தீனோடு (மார்க்கத்தோடு) சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், யார் சொன்னார் எவர் சொன்னார் என்று தெளிவாகப் பெயரைக் குறிப்பிட்டுக் கேட்பதில் மார்க்க ரீதியாக எவ்விதத் தடையோ அல்லது சங்கடமோ கிடையாது.

← முந்தையஅடுதது →