ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன்

எழுத, வாசிக்கத் தெரியாத நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடிதம் எழுதினார்கள் என்று ஸஹீஹுல் புகாரியில் வருகிறதே, இதன் விளக்கம்

நபிகள் நாயகம் (ஸல்) உம்மீ கடிதம் எழுதுதல் வஹீ

← முந்தையஅடுதது →
கேள்வி
எழுத, வாசிக்கத் தெரியாத நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடிதம் எழுதினார்கள் என்று ஸஹீஹுல் புகாரியில் வருகிறதே, இதன் விளக்கம் என்ன?
பதில்
பதில்:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடிதம் எழுதினார்கள், வாசித்தார்கள் என்று வரும் செய்திகளின் உண்மையான அர்த்தம், அவர்கள் நேரடியாகத் தமது கையால் எழுதினார்கள் என்பதல்ல. மாறாக, வேறொருவரின் துணை கொண்டு எழுதச் செய்தார்கள், வாசிக்கச் செய்தார்கள் என்பதே அதனது அர்த்தமாகும். ஒரு மன்னர் கடிதம் எழுதினார் என்றால் அவர் நேரடியாக எழுதுவதில்லை, உதவியாளரைக் கொண்டுதான் எழுதுவார், அதுபோலவே இதுவும் புரிந்து கொள்ளப்பட வேண்டும்.

நபி (ஸல்) அவர்களுக்கு எழுத, வாசிக்கத் தெரியாது என்பது குர்ஆனில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதற்காக அவர்களுக்கு ஓர் எழுத்தோ இலக்கமோ தெரியாது என்று அர்த்தமில்லை; சாதாரணமாக சில எழுத்துக்களும் இலக்கங்களும் தெரிந்திருக்கலாம், ஆனால் முழுமையாக வாசிக்கக்கூடிய, எழுதக்கூடிய ஆற்றல் அவர்களுக்கு இருக்கவில்லை. மேலும், நபி (ஸல்) அவர்களுக்கு எழுத வாசிக்கத் தெரியாது என்பது ஒரு குறையும் அல்ல. இமாம் இப்னு தைமியா (ரஹ்) அவர்கள் கூறுவது போல, எழுத்தும் வாசிப்பும் ஒரு அறிவைப் பெற்றுக்கொள்ளவும், அதை மற்றவர்களுக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கவுமான ஒரு ஊடகம்தான். அல்லாஹுத்தஆலா இந்த ஊடகம் இல்லாமலேயே நேரடியாக அறிவை அவர்களின் உள்ளத்தில் பதியவைத்து முழுமையாக்கிவிட்டான். எனவே எழுத வாசிக்கத் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் அவர்களுக்கு இருக்கவில்லை என்பதே மிகச் சரியான விளக்கமாகும்.

← முந்தையஅடுதது →