ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன்

நாம் முழுமையாகத் தெரிகின்ற கண்ணாடியைச் சுத்ராவாக (தடுப்பாக) வைத்துத் தொழலாமா?

தொழுகை சுத்ரா கண்ணாடி கவனம்

← முந்தையஅடுதது →
கேள்வி
நாம் முழுமையாகத் தெரிகின்ற கண்ணாடியைச் சுத்ராவாக (தடுப்பாக) வைத்துத் தொழலாமா?
பதில்
பதில்:

கண்ணாடியைச் சுத்ராவாக வைத்துத் தொழுவதில் மார்க்க ரீதியாக எவ்விதத் தடையும் கிடையாது. நமது தொழுகைக்கு அது இடையூறாக இல்லாவிட்டால் தாராளமாக அவ்வாறு வைத்துத் தொழலாம்.

ஆனால், கண்ணாடியில் நமது பிம்பம் தெரிவதால் தொழுகையில் நமது உள்ளச்சமும், சிந்தனையும் கவனமும் சிதற வாய்ப்புள்ளது. கண்ணாடியை நேரடியாகப் பார்த்து சிந்தனை திசை திரும்பாது என உறுதியாக நம்பினால் தாராளமாகத் தொழலாம்; எனினும், கவனச்சிதறலைத் தவிர்க்க கண்ணாடியை சுத்ராவாக வைப்பதைத் தவிர்ப்பதே சிறந்தது.

← முந்தையஅடுதது →