கேள்வி
நோன்பு நோற்றிருக்கும் நிலையில் எச்சில் அல்லது சளியை விழுங்குவதால் நோன்பு முறியுமா?
பதில்
பதில்:
நோன்பு நோற்றிருக்கும் போது எச்சில் அல்லது சளியை விழுங்குவதால் நோன்பு முறியாது. இவை உடலுக்குள்ளிருந்தே இயற்கையாக உற்பத்தியாகும் திரவங்களாகும். உணவுப் பொருளாக இருந்தால் மட்டுமே நோன்பு முறியும்.
எனவே, எச்சிலைத் துப்பிக் கொண்டே இருக்க வேண்டிய அவசியமில்லை; அதனை விழுங்குவது மார்க்க ரீதியாக எவ்விதக் குற்றமுமாகாது. சளியை விழுங்குவதாலும் எவ்வித மார்க்கப் பிரச்சினையும் ஏற்படாது. மார்க்கம் அத்தகைய மிதமிஞ்சிய சிரமங்களை நமக்குத் தரவில்லை; அவ்வாறு எச்சிலைத் துப்பிக் கொண்டே இருந்தால் அது உடல் பலகீனத்திற்கே வழிவகுக்கும்.