ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன்

இரவு 12 மணிக்கு பிறகு இஷா தொழலாமா?

இஷா தொழுகை நேரம் நள்ளிரவு

← முந்தையஅடுதது →
கேள்வி
இரவு 12 மணிக்கு பிறகு இஷா தொழலாமா?
பதில்
பதில்:

இரவு 12 மணிக்கு பிறகு இஷா தொழலாமா என்று கேட்கிறார்கள். ரசூலுல்லாஹி (ஸல்) அவர்கள் "இஷா தொழுகை நடுநிசி வரை" என்று சொல்லியிருக்கிறார்கள். எனவே இஷா தொழுகையுடைய நேரத்திலிருந்து சுபஹு தொழுகையுடைய நேரம் வரைக்கும் நம்ம எடுத்தோம் என்று சொன்னால் ஒரு 12 மணி, 1 மணி வரைக்கும் என்ன செய்யலாம் ஒரு மனிதர் இஷா தொழலாம். இது இஷாவுடைய நேரமாகும்.

அதே நேரம் ஒரு மனிதர் இஷா பிந்திவிட்டது, இஷா வந்து அவருக்கு தெரியாமலோ அல்லது ஏதோ ஒரு காரணமாக விடுபட்டு விட்டது என்றால் அவர் தாராளமாக ஞாபகம் வந்த உடனேயே 12:00 மணியோ, ஒரு மணியோ, இரண்டு மணியோ, மூணு மணியோ அந்த இஷாவை சுபஹுக்கு முன்னால் தொழுது விட வேண்டும். இஷாவுடைய நேரம் என்பது இந்த அஸருடைய நேரம் மாதிரி சூரியன் மறைவதற்கு ஆரம்பிக்கிற நேரம் இஷாவுடைய நேரம், சுபஹு சூரியன் உதயம் ஆகுற நேரம் வரைக்கும் ஒருத்தர் மறந்துட்டாரு தூங்கிட்டார் என்று சொன்னால் உடனே அந்த நேரத்துக்குள் அவர் தொழுது கொள்ள வேண்டும். அது சுபஹுடைய நேரத்துக்கு முன்னரே அவர் தொழுது கொள்ள வேண்டும்.

ஆனால் இஷாவுடைய டைம் என்ன என்று கேட்டால், லுகர் வரைக்கும் சுபஹு தொழலாம், மகரிப் வரைக்கும் அசர் தொழலாம். ஆனால் யாருக்கு? மறந்தவருக்கு, தெரியாமல் தூங்கியவருக்கு, விடுபட்டவருக்கு தான் அப்படி தொழலாமே தவிர, வேணும் என்று அந்த அளவுக்கு (நள்ளிரவு தாண்டி) பிற்படுத்த கூடாது என்பதுதான் அந்த ஹதீத்துடைய அர்த்தமாகும்.

← முந்தையஅடுதது →