ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன்

நபிகளாரிடமிருந்து இரண்டு வகையான கல்விப் பாத்திரங்களைப் பெற்றேன், ஒன்றைப் பரப்பிவிட்டேன், மற்றொன்றைச் சொன்னால் என் அடித்த

ஹதீஸ் அபூஹுரைரா (ரழி) சரிதம் கல்வி

← முந்தையஅடுதது →
கேள்வி
நபிகளாரிடமிருந்து இரண்டு வகையான கல்விப் பாத்திரங்களைப் பெற்றேன், ஒன்றைப் பரப்பிவிட்டேன், மற்றொன்றைச் சொன்னால் என் அடித்தொண்டை வெட்டப்படும் என அபூஹுரைரா (ரழி) கூறியுள்ள ஹதீஸின் விளக்கம் என்ன?
பதில்
பதில்:

அபூஹுரைரா (ரழி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடமிருந்து ஏராளமான செய்திகளைக் கற்றிருந்தார்கள். அதிலே ஷரீஅத் (மார்க்கச் சட்ட திட்டங்கள்) தொடர்பான அனைத்துச் செய்திகளையும் அவர்கள் முழுமையாக மக்களிடம் கொண்டு சேர்த்துவிட்டார்கள். ஆனால், ஷரீஅத் தொடர்பில்லாத, வரவிருக்கும் சில மோசமான ஆட்சியாளர்கள், மன்னர்கள் மற்றும் அவர்களது பெயர்கள், வரலாறுகள் குறித்த விமர்சன ரீதியான செய்திகளை அவர்கள் வெளிப்படுத்தவில்லை.

அந்த வரலாற்றுச் செய்திகளை அவர் வெளிப்படுத்தியிருந்தால், அதனால் சமுதாயத்தில் அந்த ஆட்சியாளர்களுக்கு எதிராகப் புரட்சிகள் ஏற்பட்டிருக்கலாம், அல்லது அந்த ஆட்சியாளர்களால் அவரது உயிருக்கு ஆபத்து (அடித்தொண்டை வெட்டப்படுதல்) ஏற்பட்டிருக்கலாம் என்பதாலேயே அவர் அவற்றை வெளிப்படுத்தவில்லை. அச்செய்திகளை எத்திவைக்க வேண்டும் என்ற கட்டாயம் அவருக்கு மார்க்க ரீதியாக இருக்கவில்லை; அவ்வாறு கட்டாயம் இருந்திருந்தால் உயிராபத்து வந்தாலும் அவர் அதை எத்திவைத்திருப்பார்.

மேலும், நபிகளார் சில செய்திகளைத் தனிப்பட்ட ரீதியில் சில நபித்தோழர்களுக்கு மட்டுமே சொல்லியிருக்கலாம். எனினும், அபூஹுரைரா (ரழி) அவர்கள் சொல்லாத அந்த ஆட்சி தொடர்பான செய்திகள் கூட, வேறு பல நபித்தோழர்கள் மூலமாக நமக்கு வேறு வழிகளில் ஹதீஸ்களாக வந்து சேர்ந்துள்ளன என்பதே உண்மையாகும்.

← முந்தையஅடுதது →