ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன்

இமாம் அபூஹனீபா (ரஹ்) ஒரு சிறந்த அறிஞர். அப்படியிருக்க ஏன் நாம் அவரின் மத்ஹபைப் பின்பற்றக் கூடாது?

மத்ஹப் இமாம் அபூஹனீபா குர்ஆன் ஹதீஸ்

← முந்தையஅடுதது →
கேள்வி
இமாம் அபூஹனீபா (ரஹ்) ஒரு சிறந்த அறிஞர். அப்படியிருக்க ஏன் நாம் அவரின் மத்ஹபைப் பின்பற்றக் கூடாது?
பதில்
பதில்:

இமாம் அபூஹனீபா ஒரு தலைசிறந்த முஜ்தஹித், ஏன் அவரது மத்ஹபைப் பின்பற்றக் கூடாது என்ற கேள்விக்குச் சுருக்கமான பதில் இதுதான். மத்ஹபுகளைப் பின்பற்றக் கூடாது என்ற பிரச்சாரம் வந்ததற்கான அடிப்படைக் காரணம், நமது ஊர்களில் மத்ஹப் இருந்த நிலைமைதான். குர்ஆனும் ஹதீஸும் இல்லை, ஊர் ஜமாஅத் போடும் சட்டமே சட்டம் என்ற நிலை இருந்தது. கத்தம், கந்தூரி, ஃபாத்திஹா, கப்ரு வணக்கம், தாயத்து, தட்டுத் தகடு என அனைத்தும் மார்க்கம் என்ற பெயரில் சரியெனக் கருதப்பட்டன. இதுபோன்று மார்க்கத்திற்கு முரணான சீதனம், தலைவரி போன்ற அந்நிய மதக் கலாச்சாரங்களும் இஸ்லாத்தில் ஊடுருவின.

இப்படிப்பட்ட நிலையில் மத்ஹபைப் பின்பற்றுவது பிழை. ஆனால், இமாம் அபூஹனீபா, இமாம் மாலிக், இமாம் ஷாஃபி, இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் போன்ற தலைசிறந்த மார்க்க அறிஞர்களின் ஆதாரப்பூர்வமான ஃபத்வாக்களின் தொகுப்பே மத்ஹப் ஆகும். இந்த அறிஞர்களின் ஆய்வுகளை ஒரு முஸ்லிம் படிப்பது பிழையல்ல. நாமே கூட சில விஷயங்களில் அவர்கள் பெரிய மார்க்க அறிஞர்கள், அவர்கள் குர்ஆன், சுன்னா அடிப்படையில் தான் கூறுவார்கள் என நம்பி, அவர்களது ஆய்வுகளைச் சுட்டிக்காட்டுகிறோம். இப்படிப்பட்ட பின்பற்றுதலை யாரும் தடை செய்யவில்லை.

ஆனால், எந்தவொரு புத்தகத்திலோ அல்லது ஊர் வழக்கத்திலோ உள்ளதை மட்டுமே பிடிவாதமாகப் பின்பற்றுவதுதான் பிழையாகும். மாறாக, குர்ஆன் மற்றும் சுன்னாவிற்கு முரணாக எந்தவொரு கருத்து அமைந்தாலும், அதனை விட்டுவிடுவதே உண்மையான முஸ்லிமின் கடமையாகும். இந்த அடிப்படையில்தான் மத்ஹபுக் குருட்டுத்தனம் எதிர்க்கப்பட்டதே தவிர, இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்கள் ஒரு மிகப்பெரிய அறிஞர் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

← முந்தையஅடுதது →