கேள்வி
தொழுகைக்குப் பின் ஓதும் சில திக்ருகளைக் கூறினால் கடல் நுரையளவு பாவங்கள் இருந்தாலும் மன்னிக்கப்படும் என்பது ஆதாரப்பூர்வமான ஹதீஸா?
பதில்
பதில்:
ஆம், இது ஸஹீஹ் முஸ்லிமில் இடம்பெறக்கூடிய ஓர் ஆதாரப்பூர்வமான செய்தியாகும்.
யார் ஒவ்வொரு கடமையான தொழுகைக்குப் பின்பும் "சுப்ஹானல்லாஹ்" என்று 33 தடவைகளும், "அல்ஹம்துலில்லாஹ்" என்று 33 தடவைகளும், "அல்லாஹு அக்பர்" என்று 33 தடவைகளும் ஆக மொத்தம் 99 தடவைகள் கூறிவிட்டு, 100-ஆவதாக "லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக்க லஹு, லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர்" என்று சொல்கிறாரோ, அவரது பாவங்கள் கடல் நுரையளவு இருந்தாலும் மன்னிக்கப்படும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகைக்குப் பிறகு இந்தச் செயலை ஆர்வப்படுத்திப் பல ஹதீஸ்களில் சொல்லியுள்ளார்கள். இது ஆதாரப்பூர்வமான செய்தியை அடிப்படையாகக் கொண்ட ஒரு சுன்னாவாகும்.