ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன்

அரஃபா நாளை (துல்ஹஜ் 9-ஆம் நாள்) நாம் எவ்வாறு தீர்மானிப்பது? ஹாஜிகள் அரஃபாவில் ஒன்று கூடும் நாளை வைத்து தீர்மானிக்க வேண்ட

ஹஜ் நோன்பு பிறை மக்கா

← முந்தையஅடுதது →
கேள்வி
அரஃபா நாளை (துல்ஹஜ் 9-ஆம் நாள்) நாம் எவ்வாறு தீர்மானிப்பது? ஹாஜிகள் அரஃபாவில் ஒன்று கூடும் நாளை வைத்து தீர்மானிக்க வேண்டுமா அல்லது உள்ளூர் பிறையை வைத்து தீர்மானிக்க வேண்டுமா?
பதில்
பதில்:

அரஃபா நாளைப் பொறுத்தவரை, நாம் எந்தப் பிரதேசத்தில் வாழ்கிறோமோ அந்தப் பிரதேசத்தின் பிறை கணக்கீட்டின்படி எது துல்ஹஜ் ஒன்பதாவது நாளாக வருகிறதோ, அந்த நாளில்தான் நாம் நோன்பு நோற்க வேண்டும். ஹாஜிகள் அரஃபாவில் ஒன்று கூடுவதை வைத்து நமது ஒன்பதாவது நாள் நோன்பைத் தீர்மானிப்பது தவறாகும்.

மக்காவில் வாழக்கூடிய மக்கள் அவர்களுடைய பிறைக் கணக்கீட்டின்படி ஒன்பதாம் நாளில் அரஃபா மைதானத்தில் ஒன்று கூடுகிறார்கள். அந்த அரஃபா நாளை வைத்து ஒன்பதாம் நாளைத் தீர்மானிக்கக் கூடாது; மாறாக ஒன்பதாம் நாளை வைத்துத்தான் அரஃபா நாள் தீர்மானிக்கப்படுகிறது. எனவே பிறையைக் கண்டு எது ஒன்பதாம் நாளோ அதுவே நோன்புக்குரிய நாளாகும். சவுதி அரேபியாவின் பிறையை ஏற்றுச் செயல்படும் சர்வதேசப் பிறைக் கொள்கையுடையவர்கள், அந்தப் பிறையின்படி ஒன்பதாம் நாள் நோன்பு வைக்க வேண்டும்; உள்ளூர் பிறையை மதிப்பவர்கள் உள்ளூர் பிறை கணக்கின்படி ஒன்பதாம் நாள் நோன்பு வைக்க வேண்டும்.

தகவல் தொடர்பு (Media) வளர்ச்சியடையாத ரசூல் (ஸல்) அவர்கள் காலம் முதல் எந்தக் காலகட்டத்திலும் ஹாஜிகள் அரஃபாவில் எப்போது ஒன்று கூடுகிறார்கள் என்று பார்த்து யாரும் நோன்பு வைக்கவில்லை; மாறாக பிறையை வைத்துத்தான் நோன்பு நோற்றார்கள். இன்று ஊடகம் வளர்ந்து தகவல் உடனுக்குடன் கிடைப்பதால் அரஃபாவில் ஒன்று கூடும் அதே நாளில் நோன்பு வைக்கலாம் என்ற வாதம் ஆரம்ப கால மார்க்க நடைமுறைகளில் இல்லாத ஒரு புதிய வாதமாகும். எனவே, பிறையின் அடிப்படையிலேயே அரஃபா நாளின் நோன்பு தீர்மானிக்கப்பட வேண்டும் என்பதே மிகச் சரியான மார்க்க நிலைப்பாடாகும்.

← முந்தையஅடுதது →