ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன்

இப்ராஹீம் நபி அவர்கள் தமக்கு மஹ்ரமான (நெருங்கிய இரத்த உறவுடைய) பெண்ணை திருமணம் முடித்தார்களா? ஆரம்பத்தில் ஆதம் நபியின் ப

இப்ராஹீம் (அலை) திருமணம் சரிதம் மஹ்ரம்

← முந்தையஅடுதது →
கேள்வி
இப்ராஹீம் நபி அவர்கள் தமக்கு மஹ்ரமான (நெருங்கிய இரத்த உறவுடைய) பெண்ணை திருமணம் முடித்தார்களா? ஆரம்பத்தில் ஆதம் நபியின் பிள்ளைகள் எவ்வாறு திருமணம் செய்தார்கள்?
பதில்
பதில்:

ஆரம்ப காலத்தில் மனித சமூகம் பலுகிப் பெருக வேண்டும் என்பதற்காக ஆதம் (அலை) மற்றும் ஹவ்வா (அலை) ஆகியோரின் பிள்ளைகள் எவ்வாறு திருமணம் செய்தார்கள் என்ற ஒரு வரலாற்றுப் பின்னணி உள்ளது. அந்த காலகட்டத்தில் ஆதம் மற்றும் ஹவ்வா ஆகிய இருவர் மாத்திரமே மனிதர்களாக இருந்ததால், அவர்கள் மூலமாகப் பிறந்த பிள்ளைகளே தங்களுக்குள் திருமணம் செய்ய வேண்டிய ஒரு கட்டாய நிர்ப்பந்தம் இருந்தது. அதாவது, ஒரு கர்ப்பத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகளுக்கும், அடுத்த கர்ப்பத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகளுக்கும் இடையில் மாற்றித் திருமணம் செய்து வைக்கப்பட்டதாக இஸ்லாமிய வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். இதற்கு அல்குர்ஆனிலோ அல்லது நேரடியான ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களிலோ வலுவான ஆதாரங்கள் இல்லாவிட்டாலும், உலகத்தின் உற்பத்திக்காக அன்றைய சூழ்நிலையில் மனிதர்கள் அப்படித் திருமணம் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டார்கள் என்பது ஒரு வரலாற்றுப் பதிவாகும்.

ஆனால், இந்த நடைமுறையை இப்ராஹீம் (அலை) அவர்களின் காலகட்டத்தோடு ஒப்பிடுவது முற்றிலும் தவறானதாகும். இப்ராஹீம் நபி அவர்கள் தமக்கு மஹ்ரமான (சொந்த சகோதரி அல்லது சகோதரரின் மகள் போன்ற) ஒரு பெண்ணைத் திருமணம் முடித்தார்கள் என்று சொல்வதற்கு அல்குர்ஆனிலோ, ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களிலோ அல்லது எந்தவொரு இஸ்லாமிய வரலாற்றுப் பதிவுகளிலோ எவ்விதமான அடிப்படை ஆதாரமும் கிடையாது. இது முற்றிலும் ஆதாரமற்ற ஒரு செய்தியாகும்.

← முந்தையஅடுதது →