ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன்

இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதை ஏற்றுக்கொண்டாலும், அவனுக்கு "அல்லாஹ்" என்றுதான் பெயர் இருக்க வேண்டுமா? ஏன் அந்தப் பெயரை

அல்லாஹ் கடவுள் ஏகத்துவம் மொழியியல்

← முந்தையஅடுதது →
கேள்வி
இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதை ஏற்றுக்கொண்டாலும், அவனுக்கு "அல்லாஹ்" என்றுதான் பெயர் இருக்க வேண்டுமா? ஏன் அந்தப் பெயரைக் குறிப்பிட்டு அழைக்கிறீர்கள்?
பதில்
பதில்:

இறைவன் ஒருவன் இருக்கிறான் என்றால், அவன் எத்தகைய தகுதிகளையும் பண்புகளையும் கொண்டிருக்க வேண்டும் என்று மனிதர்களின் பகுத்தறிவும் சிந்தனையும் சொல்கிறதோ, அந்த உண்மையான இறை இலக்கணத்திற்குப் பெயர்தான் "அல்லாஹ்" என்பதாகும். தன்னை எவனும் படைக்காதவனாகவும், படைப்புகளின் எவ்விதத் தேவையுமற்றவனாகவும் இருப்பவன்தான் உண்மையான இறைவன்.

உலகத்தில் பலர் கடவுள் என்று நம்புபவர்களுக்குத் தாய், தந்தை, மனைவி மற்றும் பிள்ளைகள் இருப்பதாகக் கற்பனை செய்கிறார்கள். ஆனால், அவ்வாறு கூறுபவர்கள் கூடத் தாங்கள் வணங்கும் அந்த தெய்வங்களுக்கு "அல்லாஹ்" என்று பெயரிடவில்லை. நாங்களும் அத்தகைய பலவீனமான பண்புகளைக் கொண்ட எவருக்கும் "அல்லாஹ்" என்று பெயர் சூட்டக் கூடாது என்றே கூறுகிறோம். எந்த இறைவனுக்குத் தாய், தந்தை, மனைவி, மக்கள் இல்லையோ, மனிதர்களின் பக்கம் எவ்விதத் தேவையும் இல்லையோ, யாருடைய உருவத்தையும் உலகத்தில் எவரும் பார்த்ததில்லையோ அவனுக்கு மாத்திரமே நாங்கள் "அல்லாஹ்" என்று பெயரிடுகிறோம்.

மொழியியல் ரீதியாக ஆய்வு செய்து பார்த்தால், உலக மொழிகள் அனைத்தின் மூலத்திலும், அது பைபிளின் மூல மொழியாக இருந்தாலும் சரி அல்லது யூதர்களின் மொழியாக இருந்தாலும் சரி, அல்லாஹ் என்ற சொல் வெவ்வேறு திரிபுகளில் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காண முடியும். நாங்கள் நம்புகின்ற இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட வேதமான அல்குர்ஆன், இந்தத் தூய்மையான இலக்கணங்களைக் கொண்ட ஏக இறைவனுக்கு "அல்லாஹ்" என்ற பெயரையே எங்களுக்குச் சொல்லித்தருகிறது. இறைவனுக்குரிய உண்மையான தகுதிகள் எவரிடம் உள்ளதோ அவனை மாத்திரமே "அல்லாஹ்" என்று அழைக்கிறோம்; அந்த இலக்கணங்களுக்குப் பொருந்தாத எவரையும் நாங்கள் அல்லாஹ் என்று அழைப்பதில்லை.

← முந்தையஅடுதது →