ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன்

ஜமாஅத் தொழுகையில் பின்பற்றித் தொழுபவர் (மஃமூம்) தவறுதலாக இமாமை முந்திவிட்டால், அதற்காக அவர் ஸஜ்தா ஸஹ்வு செய்ய வேண்டுமா?

தொழுகை இமாம் ஸஜ்தா ஸஹ்வு சட்டம்

← முந்தையஅடுதது →
கேள்வி
ஜமாஅத் தொழுகையில் பின்பற்றித் தொழுபவர் (மஃமூம்) தவறுதலாக இமாமை முந்திவிட்டால், அதற்காக அவர் ஸஜ்தா ஸஹ்வு செய்ய வேண்டுமா?
பதில்
பதில்:

ஜமாஅத் தொழுகையில் இமாமை முந்திச் செயல்படுவது மார்க்கத்தில் வன்மையாகத் தடுக்கப்பட்ட ஒரு தவறான செயலாகும். ஒருவர் தவறுதலாக இமாமை முந்திவிட்டால், அதற்காக அவர் அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்பு (இஸ்திஃபார்) தேடிக்கொள்ள வேண்டும். வேண்டும் என்றே ஒருபோதும் அவ்வாறு இமாமை முந்திச் செயல்படக் கூடாது.

ஆயினும், இவ்வாறு இமாமை முந்தியதற்காக அவர் ஸஜ்தா ஸஹ்வு செய்ய வேண்டிய அவசியம் கிடையாது. ஸஜ்தா ஸஹ்வு என்பதைப் பொறுத்தவரை, அது தொழுகையில் உள்ள கடமைகளில் ஒன்றை மறதியாக விட்டால், அல்லது ஒன்றை கூடுதலாகச் செய்தால், அல்லது குறைத்துவிட்டால் மாத்திரமே அதை நிவர்த்தி செய்வதற்காக செய்யப்பட வேண்டிய ஒரு சுன்னத்தான பரிகாரமாகும். இமாமை முந்துவதாலோ அல்லது இமாமை விட்டுப் பிந்துவதாலோ ஸஜ்தா ஸஹ்வு செய்ய வேண்டும் என்று மார்க்கத்தில் எவ்வித வழிகாட்டலும் இல்லை. எனவே, இதற்காக ஸஜ்தா ஸஹ்வு செய்வது அவசியமற்றதாகும்.

← முந்தையஅடுதது →