ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன்

மக்கா ஹரத்தில் நிலத்திலிருந்து இரத்தம் கக்கப்படுவதாகப் பரப்பப்படும் வீடியோவின் உண்மைநிலை என்ன?

மக்கா ஹரம் இரத்தம் போலிச் செய்தி

← முந்தையஅடுதது →
கேள்வி
மக்கா ஹரத்தில் நிலத்திலிருந்து இரத்தம் கக்கப்படுவதாகப் பரப்பப்படும் வீடியோவின் உண்மைநிலை என்ன?
பதில்
பதில்:

இந்த செய்தி அப்படியே பரவி, ஷியாக்கள் அல்லாத சாதாரண மக்கள் கூட எப்படி இதைக் கையாள ஆரம்பித்துவிட்டார்கள் என்று சொன்னால், "மக்கா மதீனாவின் பூமியில் நடக்கக்கூடிய அநியாயங்களுடைய வெளிப்பாடாக இந்த இரத்தம் வெளியாகுது" என்று சொல்லி சிலர் பீதியூட்டுகிறார்கள். ஒரு செய்தி வந்தால், அதனுடைய உண்மைத்தன்மை என்ன என்பதைப் பற்றி ஒரு சின்ன விசாரணை கூட செய்யாமல் இது போன்ற செய்திகளைப் பரப்புவது என்பது இஸ்லாத்தைப் பற்றிய தவறான எண்ணங்களை விதைப்பதோடு, போலி ஆன்மீகத்திற்கு வழிவகுக்கக் கூடிய அமைப்பிலான ஒரு நிகழ்வையே இவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.

உண்மையில் அந்த மக்கா மதீனாவின் பாதுகாப்பு போலீசார் தெரிவித்த செய்தி என்னவென்றால், இது கடந்த காலங்களில் நடந்த ஒரு நிகழ்வாகும். ஒரு ஆப்பிரிக்க சகோதரர் ஒருவருடைய கால் உடைந்ததன் காரணமாக, அந்த காலில் ஏற்பட்ட பெரிய பாதிப்பினால் அந்த டைல்ஸில் வேகமாக பரவிய இரத்தம்தான் அது. அந்த வீடியோ கேமரா தரம் (குவாலிட்டி) குறைந்த கேமரா என்பதனால் இமேஜ் உடைந்த (broken) காட்சியாக விளங்குகிறது. அதனால்தான் நிலம் வெடித்து இரத்தம் வருவது போன்ற ஒரு காட்சி அதிலே தந்துவிட்டு, அந்த சிந்தனையோடு பார்க்கிற நேரத்தில் அப்படி ஒரு சிந்தனைப் போக்கு அனைவருக்கும் உண்டாகின்ற அமைப்பில் இருக்கிறது. இது ஏற்கனவே வந்த ஒரு பழைய வீடியோ பதிவு.

உடனே அந்தப் பாதிக்கப்பட்ட நபர் முஸ்தபா அஜியாத் என்று சொல்லக்கூடிய மருத்துவமனைக்கு (அஜியாத் பிரதேசத்தில் உள்ள ஹாஸ்பிடலுக்கு) கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பிரிவிலே சேர்க்கப்பட்டார். இதுதான் அங்கே நடந்த சம்பவம். இது இப்பொழுது நடந்ததல்ல; எப்பொழுதோ நடந்த ஒரு சம்பவம். அதில் வெளியான வீடியோவை இதோடு இணைத்து, "ஆசூரா தினத்தில் ஹுசைன் (ரழி) அவர்களுடைய இரத்தத்திற்காக ஹரமைன் பூமியிலேயே அல்லாஹுத்தஆலா இரத்தத்தை வெளிய வர வைத்துவிட்டான்" என்று சொல்லி ஒரு போலியான செய்தியைப் பரப்பி, இதையும் கொஞ்சம் பேர் நம்புகிறார்கள் என்று சொன்னால், மார்க்கம் என்றால் என்ன, ஒரு விஷயத்தை எப்படி கையாள வேண்டும் என்ற அடிப்படை அறிவில்லாமல் மக்கள் இருந்து கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு இந்த செய்தியே ஒரு போதுமான ஆதாரமாக இருக்கிறது. தயவு செய்து இவ்வாறான போலிச் செய்திகளை யாரிடத்திலும் பரப்ப வேண்டாம்.

← முந்தையஅடுதது →