ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன்

சதுரங்கம் (Chess) மற்றும் தாயக்கட்டை விளையாடுவது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதா?

விளையாட்டு தாயக்கட்டை உணவு

← முந்தையஅடுதது →
கேள்வி
சதுரங்கம் (Chess) மற்றும் தாயக்கட்டை விளையாடுவது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதா?
பதில்
பதில்:

சதுரங்கம் (Chess) போன்ற காய்களை வைத்து விளையாடப்படும் விளையாட்டுக்களை இஸ்லாம் முற்றிலுமாகத் தடை செய்துள்ளது . இது குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வன்மையாக எச்சரிக்கும் போது, 'யார் கட்டை விளையாட்டு (நர்தஷீர்) விளையாடுகிறார்களோ, அவர்கள் தங்களது கையைப் பன்றியின் இறைச்சியிலும் இரத்தத்திலும் தோய்த்துக் கொண்டதற்குச் சமம்' என்று கூறியதாக புரைதா (ரழி) அவர்கள் அறிவிக்கும் செய்தி ஸஹீஹ் முஸ்லிமில் (ஹதீஸ் எண்: 2260) பதிவு செய்யப்பட்டுள்ளது .

இந்த ஹதீஸில் இடம்பெறும் 'நர்தஷீர்' என்ற வார்த்தை தாயக்கட்டைக்குச் சொல்லப்பட்டதா அல்லது சதுரங்கத்திற்குச் சொல்லப்பட்டதா என்ற கருத்து முரண்பாடு அறிஞர்களிடையே காணப்படுகிறது . ஆயினும், ஒரே விதமான மோசமான விளைவை ஏற்படுத்தக்கூடிய இரண்டு விளையாட்டுக்களுக்கு மத்தியில் இஸ்லாமிய மார்க்கம் தனது தீர்ப்பில் வேறுபாடு காட்டாது என்பதே நாம் புரிந்துகொள்ள வேண்டிய அடிப்படையாகும் . நர்தஷீர் என்பது தாயக்கட்டையை மாத்திரம் குறித்தாலும், தாயக்கட்டையை விட சதுரங்கம் அதிக நேரத்தை வீணாக்கக்கூடிய ஒரு மோசமான விளையாட்டாகும் . ஒரு விளையாட்டைத் தடை செய்துவிட்டு, அதைவிட மோசமான நேர விரயத்தை ஏற்படுத்தும் இன்னொன்றை இஸ்லாம் ஒருபோதும் அனுமதிக்காது . எனவே, காய்களை வைத்து விளையாடக்கூடிய இத்தகைய விளையாட்டுக்கள் அனைத்தும் மார்க்க ரீதியாக முற்றிலுமாகத் தடைசெய்யப்பட்ட (ஹராமான) காரியங்களாகும் .

← முந்தையஅடுதது →