ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன்

மிஃராஜ் பயணத்தின் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 10 வகையான பெண்களையும் அவர்களுக்கு வழங்கப்படும் கடுமையான தண்டனைகளையும்

பெண்கள் தண்டனை மிஃராஜ் இட்டுக்கட்டப்பட்ட செய்தி

← முந்தையஅடுதது →
கேள்வி
மிஃராஜ் பயணத்தின் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 10 வகையான பெண்களையும் அவர்களுக்கு வழங்கப்படும் கடுமையான தண்டனைகளையும் பார்த்ததாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் செய்தியின் மார்க்க நிலைப்பாடு என்ன?
பதில்
பதில்:

மிஃராஜில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 10 பெண்களைப் பார்த்ததாகவும், அந்த ஒவ்வொரு பெண்களும் தாங்கள் செய்த பாவங்களுக்காகக் கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்பட்டிருந்ததாகவும் சொல்லப்படுகின்ற இந்தச் செய்தி அடிப்படையற்ற, இட்டுக்கட்டப்பட்ட ஒரு பொய்யான செய்தியாகும் . ஒரு சில அறிவிப்பாளர்கள் ஊடாக சில விஷயங்களுக்கு இது வந்தாலும், இது மிகவும் பலவீனமான, மிக மிக பலவீனமான செய்தியாகும் .

எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லாத இந்த இட்டுக்கட்டப்பட்ட செய்தி தற்காலத்தில் வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது . இந்தச் செய்தியைப் பரப்புபவர்கள், இது குர்ஆன் அல்லது ஹதீஸில் வந்துள்ளதா, இதற்கு என்ன ஆதாரம் உள்ளது என்பதை முதலில் உறுதிப்படுத்தியிருக்க வேண்டும் . நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட இத்தகைய செய்திகளைப் பரப்புவது மார்க்கத்தில் ஒரு பெரும் பாவமான செயலாகும். எனவே, இவ்வாறான பொய்யான செய்திகளைப் பரப்புவதில் மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

← முந்தையஅடுதது →