ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன்

நமது தொழுகை முற்றுமுழுதாக நபிவழிப்படி இல்லாது விட்டால் அந்தத் தொழுகை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாதா? இதற்கான மார்க்க சட்டம் எ

தொழுகை ஹதீஸ் சட்டம் ஸஜ்தா ஸஹ்வு

அடுதது →
கேள்வி
நமது தொழுகை முற்றுமுழுதாக நபிவழிப்படி இல்லாது விட்டால் அந்தத் தொழுகை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாதா? இதற்கான மார்க்க சட்டம் என்ன?
பதில்
பதில்:

நபிவழிப்படிதான் நாம் தொழ வேண்டும் என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை. ஆனால், நபிவழி என்று தவறாக நினைத்தோ அல்லது மறதியாகவோ சில தவறுகள் ஏற்படும் போது, அந்தத் தவறுகளின் தன்மையைப் பொறுத்தே தொழுகை ஏற்றுக்கொள்ளப்படுமா இல்லையா என்பது தீர்மானிக்கப்படும் .

தொழுகையில் ருகூஃ, சுஜூது போன்ற பிரதான செயல்கள் உள்ளன. இஸ்லாம் எதனை விட்டால் தொழுகை நிறைவேறாது என்று கூறுகிறதோ, அதனை விட்டால் மட்டுமே தொழுகை செல்லாது . எதனை விட்டால் ஒரு வாஜிபான (கட்டாயமான) செயலை விட்ட குற்றம் ஏற்படுமோ, அங்கு அதனை நிவர்த்தி செய்வதற்கு ஸஜ்தா ஸஹ்வு செய்ய வேண்டும் . எதனை விட்டால் குற்றம் இல்லை என்று இஸ்லாம் சொல்லியிருக்கிறதோ, அதனை அளவுகோலாகக் கொண்டே தொழுகையின் அங்கீகாரத்தைத் தீர்மானிக்க வேண்டும் . ஒரு சிறு சுன்னத்தான விஷயத்தை ஒருவர் விடுகிறார் என்பதற்காக அவரது முழுத் தொழுகையும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்று கூறுவது முற்றுமுழுதாகத் தவறாகும் . தொழுகையில் எந்தெந்தச் செயல்களை விட்டால் என்ன சட்டம் என்பதை இஸ்லாம் நேரடியாகத் தெளிவுபடுத்தியுள்ளது; அவைகளை மாத்திரமே நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் .

அடுதது →