ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன்

கொரோனா போன்ற நிர்ப்பந்தமான சூழ்நிலைகளில் பள்ளிவாசல்களுக்குச் சென்று ஜும்ஆ தொழ முடியாத கட்டத்தில், நமது வீடுகளிலேயே ஜும்ஆ

தொழுகை

← முந்தையஅடுதது →
கேள்வி
கொரோனா போன்ற நிர்ப்பந்தமான சூழ்நிலைகளில் பள்ளிவாசல்களுக்குச் சென்று ஜும்ஆ தொழ முடியாத கட்டத்தில், நமது வீடுகளிலேயே ஜும்ஆ குத்பா நிகழ்த்தித் தொழலாமா?
பதில்
பதில்:

நிர்ப்பந்தமான சூழ்நிலைகளில் பள்ளிவாசல்களுக்குச் செல்ல முடியாவிட்டால் வீடுகளில் தொழுவதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளது; ஆனால் வீடுகளில் ஜும்ஆ தொழுகையை நடத்துவதற்கு மார்க்க ரீதியாக எவ்விதமான ஆதாரமும் இல்லை.

சிலர் வீடுகளில் ஜும்ஆ நடத்தலாம் என்று மார்க்கத் தீர்ப்புக்களை வழங்கியிருக்கிறார்கள். ஆனால் ஹதீஸ்களில் தேடிப்பார்த்தால், ரசூலுல்லாஹி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலைத் தவிர அல்லது பெருநாள் திடலைத் தவிர வீடுகளிலோ அல்லது ஏனைய இடங்களிலோ ஜும்ஆ நடத்தியதற்கு எந்த ஒரு ஸஹீஹான ஆதாரமும் கிடையாது. ஜும்ஆ என்பது ஐவேளைத் தொழுகை நடத்தப்படக்கூடிய ஒரு பள்ளிவாசலில் தான் நடத்தப்பட வேண்டுமே தவிர, வீடுகளில் அதனை நடத்துவதற்கு எவ்வித ஆதாரமுமில்லை.

ரசூல் (ஸல்) அவர்களது காலத்தில் ஜும்ஆவுக்குப் பின் நடந்த குத்பாவாக அறியப்படுவது ஜுவாஸா (தற்போதைய பஹ்ரைன்) என்ற இடத்திலுள்ள பள்ளியில் நடைபெற்ற குத்பாவாகும். அதிலிருந்தே தூர இடங்களிலிருந்தும் மக்கள் ஜும்ஆவுக்காகப் பள்ளிவாசலுக்கு வந்தார்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம். மேலும், வீடுகளில் ஜும்ஆ நடத்தலாம் என்றால், பள்ளிவாசல்களில் ஜும்ஆ நடக்கும்போது கூட வீதிகளில் உள்ளோரை ஒன்றுசேர்த்து வீடுகளில் ஜும்ஆ நடத்தலாம் என்ற தவறான ஒரு நிலைக்கு அது வழிகோலும். எனவே, பள்ளிவாசலில் ஜும்ஆ தொழ முடியாவிட்டால், வீட்டில் நான்கு ரக்அத்துகள் ளுஹர் தொழுகையை நிறைவேற்ற வேண்டுமே தவிர, வீடுகளில் குத்பா நிகழ்த்தி ஜும்ஆ நடத்துவது பித்அத்தான (மார்க்கத்தில் இல்லாத) ஒரு செயலாகும்.

வீடியோ விளக்கம்
▶ YouTube-ல் காண்க
← முந்தையஅடுதது →