வியாபார நோக்கத்திற்காக (Real Estate / Business) வாங்கிப் போடப்பட்ட நிலங்களுக்கு ஒவ்வொரு வருடமும் கட்டாயமாக ஸகாத் கொடுத்தாக வேண்டும். சாதாரணமாக நமது சொந்தத் தேவைக்காகவோ அல்லது பிள்ளைகளுக்காகவோ வாங்கிப் போடப்படும் நிலங்களுக்கு மார்க்கத்தில் ஸகாத் கிடையாது.
ஆனால், விற்பனை செய்யும் நோக்கத்தோடு வாங்கப்பட்ட நிலம் என்பது வியாபாரப் பொருளாகவே கருதப்படும். அந்த நிலத்தை விற்காமல் பல வருடங்கள் வைத்திருந்தாலும், ஒவ்வொரு வருடமும் அதன் சந்தை மதிப்பைக் கணக்கிட்டு ஸகாத் வழங்க வேண்டும். சிலருக்கு அந்த நிலத்தை விற்காத வரை ஸகாத் தொகையைக் கையில் கொடுக்க பண வசதியில்லை என்றால், கடன்பட்டு ஸகாத் கொடுக்க வேண்டியதில்லை; அந்த நிலத்தை என்றைக்கு விற்கிறார்களோ, அன்று அதற்கான பல வருட ஸகாத் தொகையையும் சேர்த்துக் கொடுக்க வேண்டும். ஆனால், கட்டாயம் வருடா வருடம் கணக்கிடப்பட்டு அதற்கான ஸகாத் நிறைவேற்றப்பட வேண்டும்.