ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன்

நோன்பாளியாக இருக்கும் போது விக்கல் வந்தால் நோன்பு முறிந்துவிடுமா?

நோன்பு

← முந்தையஅடுதது →
கேள்வி
நோன்பாளியாக இருக்கும் போது விக்கல் வந்தால் நோன்பு முறிந்துவிடுமா?
பதில்
பதில்:

விக்கல் வருவது நோன்பை முறிக்காது. சாதாரணமான விக்கல் வந்து போகும் என்ற நிலையில் இருந்தால், அதனைப் பொறுமையாகத் தாங்கிக்கொண்டு நோன்பைத் தொடரலாம்.

ஆனால், சிலருக்கு விக்கல் தாங்க முடியாத அளவிற்குத் தொடர்ந்து வந்து, கண்கள் சிவந்து, தண்ணீர் குடித்தால் மட்டுமே விக்கல் நிற்கும் என்ற கடுமையான உடல் உபாதை நிலை ஏற்பட்டால், அவர்கள் நோன்பை விட்டுவிடுவதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளது. அவ்வாறு கடுமையான நிர்ப்பந்தத்தின் காரணமாக நோன்பை விடுபவர்கள், அந்த நோன்பைப் பின்னர் கழா (பதிலீடு) செய்து கொள்ள வேண்டும். சாதாரண விக்கலுக்கு நோன்பை முறிக்க வேண்டிய அவசியமில்லை.

வீடியோ விளக்கம்
▶ YouTube-ல் காண்க
← முந்தையஅடுதது →