ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன்

நாம் தத்தெடுத்து வளர்க்கும் ஆண் பிள்ளை, நமது பெற்ற மகளுக்கு மஹ்ரம் (திருமணம் செய்யத் தகாத உறவு) ஆவாரா? அவரை மஹரமாகக் கரு

திருமணம்

← முந்தையஅடுதது →
கேள்வி
நாம் தத்தெடுத்து வளர்க்கும் ஆண் பிள்ளை, நமது பெற்ற மகளுக்கு மஹ்ரம் (திருமணம் செய்யத் தகாத உறவு) ஆவாரா? அவரை மஹரமாகக் கருதிப் பெண்கள் பிரயாணம் செய்யலாமா?
பதில்
பதில்:

இஸ்லாத்தில் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்ப்பதை மார்க்கம் அனுமதிக்கிறது என்றாலும், அவ்வாறு வளர்க்கப்படும் பிள்ளைக்கும் வளர்க்கும் குடும்பத்தினருக்கும் இடையில் தாமாகவே "மஹ்ரம்" (திருமணம் செய்யத் தகாத உறவு) சட்டம் உருவாகிவிடாது.

ஒரு பிள்ளை மஹ்ரமாக மாற வேண்டுமானால், அந்தப் பிள்ளைக்கு இரண்டு வயதிற்குள் வளர்ப்புத் தாயோ அல்லது அவரது சகோதரிகளோ கட்டாயம் தாய்ப்பால் ஊட்டியிருக்க வேண்டும். அப்படித் தாய்ப்பால் ஊட்டியிருந்தால் மட்டுமே பால்குடி உறவின் அடிப்படையில் அவர்கள் மஹ்ரமாக மாறுவார்கள். தாய்ப்பால் ஊட்டாத நிலையில் தத்தெடுத்து வளர்க்கப்பட்ட பிள்ளை என்றைக்குமே "அஜ்னபி" (திருமணம் செய்ய அனுமதிக்கப்பட்ட அந்நியர்) என்ற சட்டத்திற்குள் தான் வருவார்.

எவ்வளவுதான் பாசம் காட்டி வளர்த்தாலும், அஜ்னபிகளுடன் பழகும் போது பேண வேண்டிய ஆடை ஒழுங்குகள், தனிமையைத் தவிர்த்தல் போன்ற மார்க்க வரம்புகளைக் குடும்பப் பெண்கள் கட்டாயம் பேணியே ஆக வேண்டும். இத்தகைய வளர்ப்பு மகனை ஒரு பெண்ணுக்கு மஹ்ரமாகக் கருதிப் பிரயாணம் செல்வதற்கோ அல்லது கட்டுப்பாடின்றிப் பழகுவதற்கோ மார்க்கத்தில் எவ்வித அனுமதியும் கிடையாது. இந்த அசௌகரியங்களைத் தவிர்ப்பதற்காக, குழந்தை சிறியதாக இருக்கும்போதே பால்குடி உறவை ஏற்படுத்திக் கொள்வதே மார்க்கம் காட்டும் சிறந்த தீர்வாகும்.

வீடியோ விளக்கம்
▶ YouTube-ல் காண்க
← முந்தையஅடுதது →