ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன்

மணமகன் வலீமா விருந்து கொடுத்த பின்னால், பெண் வீட்டார் தங்கள் பங்கிற்கு திருமண விருந்து கொடுக்க மார்க்கத்தில் அனுமதி உள்ள

திருமணம்

← முந்தையஅடுதது →
கேள்வி
மணமகன் வலீமா விருந்து கொடுத்த பின்னால், பெண் வீட்டார் தங்கள் பங்கிற்கு திருமண விருந்து கொடுக்க மார்க்கத்தில் அனுமதி உள்ளதா?
பதில்
பதில்:

இஸ்லாமிய அடிப்படையில் திருமண விருந்து (வலீமா) வழங்குவது முற்றுமுழுதாக மணமகனின் (கணவனின்) கடமையாகும். அந்த வலீமா விருந்தோடு திருமணச் சாப்பாட்டுப் பொறுப்பு முடிவடைகிறது. பெண் வீட்டார் கட்டாயம் சாப்பாடு கொடுக்க வேண்டும் என்றோ, இத்தனை பேருக்கு விருந்தளிக்க வேண்டும் என்றோ மார்க்கத்தில் எவ்விதமான நிர்ப்பந்தமும் கிடையாது; இது அவர்கள் மீதான கடமையும் அல்ல.

முற்காலத்தில் பெண் வீட்டார் விருந்து அளிப்பது ஒரு கட்டாயச் சடங்காக சமூகத்தில் திணிக்கப்பட்டிருந்ததால், மார்க்கப் பற்றுள்ள மக்கள் அதனை வன்மையாகத் தவிர்த்து வந்தார்கள். ஆனால், தற்போது சமூகத்தில் அந்த நிர்ப்பந்தங்கள் குறைந்துவிட்டன.

எனவே, எந்தவிதமான நிர்ப்பந்தமும், ஊர் கட்டாயமும் இல்லாமல், பெண் வீட்டார் தாமாகவே மனமுவந்து தமது சொந்தங்கள், உறவினர்கள் அல்லது மாப்பிள்ளை வீட்டாருக்குச் சாதாரண முறையில் ஒரு விருந்து உபசாரம் செய்ய விரும்பினால், அதை மார்க்கம் தடுக்கவில்லை. கணவன் தனது கடமையான வலீமாவை நிறைவேற்றிய பின்னர், பெண் வீட்டார் தங்கள் விருப்பத்தின் பேரில் வழங்கும் இத்தகைய விருந்துகளைக் கூடாது என்று சொல்வதற்கோ மார்க்கத்தில் எந்தத் தடையும் இல்லை. ஆனால், அதனைப் பெண் வீட்டார் மீதான ஒரு கட்டாயச் சடங்காக ஆக்குவதுதான் முற்றிலும் பிழையாகும்.

வீடியோ விளக்கம்
▶ YouTube-ல் காண்க
← முந்தையஅடுதது →