ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன்

வங்கியில் சேமிப்பில் கிடைக்கும் வட்டிப் பணத்தை எடுத்து நாமே தர்மம் (சதகா) செய்யலாமா?

வட்டி

← முந்தையஅடுதது →
கேள்வி
வங்கியில் சேமிப்பில் கிடைக்கும் வட்டிப் பணத்தை எடுத்து நாமே தர்மம் (சதகா) செய்யலாமா?
பதில்
பதில்:

வட்டி என்பது முற்றிலும் ஹராமானதாகும். பல கஷ்டப்பட்டவர்கள் மற்றும் நஷ்டமடைந்தவர்களின் உழைப்பைச் சுரண்டித் தரப்படுவதே வட்டியாகும். வட்டியைப் பெறுவதும் கொடுப்பதும் மார்க்கத்தில் வன்மையாகத் தடுக்கப்பட்டுள்ளது.

வங்கியில் கணக்கு வைத்திருப்பதால் கிடைக்கும் வட்டிப் பணத்தை நாம் எடுத்துப் பிறருக்குத் தர்மம் செய்வதோ அல்லது பொது நலன்களுக்குப் பயன்படுத்துவதோ கூடாது. சில அறிஞர்கள் அதனை எடுத்துப் பொது நலன்களுக்குப் பயன்படுத்தலாம் என்று கூறினாலும், அதனை எடுக்காமல் அப்படியே வங்கியில் விட்டுவிடுவதே மிகவும் பேணுதலானதும், மார்க்கத்திற்குப் பொருத்தமானதுமான முடிவாகும்.

ஏனெனில், அந்த வட்டிப் பணம் வங்கியில் உங்களுக்கெனத் தனியாக ஒரு பெட்டியில் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கவில்லை; அது வெறுமனே கணினியில் பதியப்பட்ட இலக்கங்கள் மட்டுமே. நீங்கள் அதனைப் பெற்றுக்கொள்ளும் போதுதான் அந்த ஹராமான பணத்திற்கு நீங்கள் சொந்தக்காரராக மாறுகிறீர்கள். உங்களுக்கு எந்த நல்ல நோக்கம் இருந்தாலும், அந்தப் பணத்தைக் கையில் எடுத்த பின் உங்களுக்கு ஏதாவது ஒரு நஷ்டமோ, வறுமையோ ஏற்பட்டால், அந்த ஹராமான வட்டிப் பணத்தை உங்களுக்காகப் பயன்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படலாம். எனவே, நீங்கள் உங்கள் அசல் பணத்தை (முதலை) மட்டும் எடுத்துக்கொண்டு, வட்டிப் பணத்தை உரிமை கோராமல் அப்படியே தவிர்த்துவிடுவதே மிகச் சிறந்ததும் பாதுகாப்பானதுமாகும்.

வீடியோ விளக்கம்
▶ YouTube-ல் காண்க
← முந்தையஅடுதது →