ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன்

மறுமையில் உலகமே அழியும் போது, மலக்குமார்களும் (வானவர்கள்) மரணிப்பார்களா? அவர்கள் ஆணா, பெண்ணா?

அகீதா மரணம்

← முந்தையஅடுதது →
கேள்வி
மறுமையில் உலகமே அழியும் போது, மலக்குமார்களும் (வானவர்கள்) மரணிப்பார்களா? அவர்கள் ஆணா, பெண்ணா?
பதில்
பதில்:

மலக்குமார்கள் மரணிப்பார்களா என்பது குறித்து குர்ஆன், சுன்னாவில் நேரடியான செய்திகள் இல்லாததால், இதில் அறிஞர்களிடையே இரு வேறு கருத்துக்கள் உள்ளன. அல்குர்ஆனில், "இறைவன் நாடியவர்களைத் தவிர வானங்களிலும் பூமியிலும் உள்ள அனைவரும் அழிந்துபோவார்கள்" என்று கூறப்பட்டுள்ளது. இந்த விதிவிலக்கில் மலக்குமார்கள் மற்றும் சொர்க்கத்திலுள்ள ஹூருல் ஈன்கள் அடங்குவார்கள் என்பதால், அவர்கள் மரணிக்க மாட்டார்கள் என்ற நிலைப்பாடே மிகவும் பலமானதாகும். அல்லது குர்ஆன், சுன்னா நேரடியாகப் பேசாத இத்தகைய மறைவான விஷயங்களில் ''தவக்குஃப்'' (எந்த முடிவும் கூறாமல் மௌனம் காத்தல்) செய்வது மிகவும் பேணுதலான இஸ்லாமிய வழிமுறையாகும்.

மேலும், மலக்குமார்களைப் பெண் மக்கள் என்று கூறுவதை குர்ஆன் வன்மையாக மறுக்கிறது; அதற்காக அவர்களை ஆண்கள் என்றும் நாம் முடிவு செய்துவிட முடியாது. அல்லாஹ் அவர்களை எப்படிப் படைத்தானோ அப்படி நம்புவதே நமது ஈமானியக் கடமையாகும். நமக்குத் தேவையற்ற, வஹீயின் மூலம் விளக்கப்படாத இத்தகைய விஷயங்களை அதிகம் ஆராய்வதைத் தவிர்க்க வேண்டும்.

வீடியோ விளக்கம்
▶ YouTube-ல் காண்க
← முந்தையஅடுதது →