ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன்

மதுபானம் (சாராயம்) அடைக்கப்பட்டிருந்த போத்தல்களை நன்கு சுத்தப்படுத்திவிட்டு, அதில் நீர் போன்ற ஹலாலான பானங்களை அருந்துவதற

தூய்மை

← முந்தையஅடுதது →
கேள்வி
மதுபானம் (சாராயம்) அடைக்கப்பட்டிருந்த போத்தல்களை நன்கு சுத்தப்படுத்திவிட்டு, அதில் நீர் போன்ற ஹலாலான பானங்களை அருந்துவதற்குப் பயன்படுத்தலாமா?
பதில்
பதில்:

மதுபானம் அல்லது பன்றி இறைச்சி போன்ற தடுக்கப்பட்ட உணவுகள் பயன்படுத்தப்பட்ட பாத்திரங்களை நன்கு கழுவிச் சுத்தப்படுத்திவிட்டு, அதில் ஹலாலான உணவுகளையோ நீர் போன்ற பானங்களையோ பயன்படுத்துவதில் மார்க்க ரீதியாக எவ்விதத் தடையுமில்லை. நபி (ஸல்) அவர்கள் காஃபிர்களின் பாத்திரங்களை நன்கு கழுவிப் பயன்படுத்துமாறு நபித்தோழர்களுக்கு அனுமதித்துள்ளார்கள்.

இருப்பினும் இதில் இரண்டு முக்கிய விஷயங்களைக் கவனிக்க வேண்டும்:

  • சந்தேகத்தைத் தவிர்த்தல்: நீங்கள் அந்தப் போத்தல்களைப் பயன்படுத்துவதைப் பார்த்து, மற்றவர்கள் உங்களைச் சந்தேகக் கண் கொண்டு பார்க்கக்கூடிய நிலை (இவர் மது அருந்துகிறாரோ என்ற சந்தேகம்) ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டும்.
  • தவறான எண்ணம்: பாவம் செய்வோருக்கு ஒப்பாக நடக்க வேண்டும் என்ற எண்ணத்திலோ, அல்லது அந்தப் போத்தலின் அழகில் கவரப்பட்டு அதை ஒரு ஆடம்பரமாகப் (Fashion) பயன்படுத்த வேண்டும் என்ற தவறான உள்நோக்கத்திலோ அது பயன்படுத்தப்படக் கூடாது.

இந்த இரண்டு காரணங்களும் இல்லாத பட்சத்தில், ஒரு அவசியத் தேவைக்காக அதனைச் சுத்தப்படுத்திப் பயன்படுத்துவது மார்க்கத்தில் ஆகுமானதேயாகும்.

வீடியோ விளக்கம்
▶ YouTube-ல் காண்க
← முந்தையஅடுதது →