ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன்

பட்டாசு கொளுத்துதல், வெடித்தல் மற்றும் தீ விளையாட்டுக்கள் பற்றிய இஸ்லாமிய நிலைப்பாடு என்ன? இது மார்க்கத்தில் அனுமதிக்கப்

சட்டம்

← முந்தையஅடுதது →
கேள்வி
பட்டாசு கொளுத்துதல், வெடித்தல் மற்றும் தீ விளையாட்டுக்கள் பற்றிய இஸ்லாமிய நிலைப்பாடு என்ன? இது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதா?
பதில்
பதில்:

பட்டாசு கொளுத்துதல் மற்றும் தீ விளையாட்டுக்கள் இஸ்லாமிய மார்க்கத்தில் முற்றிலும் தடைசெய்யப்பட்ட (ஹராமான) காரியங்களாகும்.

இதற்கு நேரடியாகப் பட்டாசு என்ற வார்த்தையில் ஹதீஸ் வராவிட்டாலும், ரசூலுல்லாஹி (ஸல்) அவர்கள் தடைசெய்த ஒரு விளையாட்டின் அடிப்படையை வைத்து இதனை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம். நபிகளார் (ஸல்) அவர்கள் சுண்டு விரலுக்கும் பெருவிரலுக்கும் இடையில் சிறு கற்களை வைத்துச் சுண்டி விளையாடும் விளையாட்டைத் தடை செய்தார்கள். அதற்குக் காரணம் கூறும்போது, "இது எந்தப் பிராணியையும் வேட்டையாடாது; எதிரியைக் காயப்படுத்தாது. ஆனால் ஒருவரின் கண்ணைப் பறிக்கலாம் அல்லது பல்லை உடைக்கலாம்" என்றார்கள் (நூல்: புகாரி).

ஒரு சிறிய கல்லைச் சுண்டி விளையாடுவதற்கே இவ்வளவு கறாரான தடையை இஸ்லாம் விதிக்கிறது என்றால், பட்டாசு வெடிப்பதன் விபரீதங்கள் எவ்வளவு பெரியவை என்பதைச் சிந்திக்க வேண்டும். பட்டாசுகளால் எத்தனையோ ஓலை வீடுகள் எரிந்துள்ளன, கைகள் கருகியுள்ளன, முகங்கள் சிதைந்து கண்களை இழந்தவர்களும், உயிரிழந்தவர்களும் ஏராளம்.

மேலும், இது இஸ்லாமிய கலாச்சாரம் அல்ல. இதில் கோடிக்கணக்கான ரூபாய்கள் வீணாக எரிக்கப்படுகின்றன (இஸ்ராஃப் - வீண்விரயம்). "நாங்கள் இவ்வளவு வெடித்தோம், நீங்கள் எவ்வளவு வெடித்தீர்கள்" என்று பெருமையடிப்பது, மற்றவர்களை அச்சமுறுத்துவது எனப் பல தீமைகளை இது உள்ளடக்கியுள்ளது. எனவே, பெரியவர்கள் இதைப் பயன்படுத்தக் கூடாது; குழந்தைகளுக்கும் இதனை வாங்கிக் கொடுத்துப் பழக்கக் கூடாது.

வீடியோ விளக்கம்
▶ YouTube-ல் காண்க
← முந்தையஅடுதது →