ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன்

நபித்தோழர்களுடைய (ஸஹாபாக்களின்) மார்க்கத் தீர்ப்புகளை நாம் எவ்வாறு அணுக வேண்டும்? அது மார்க்கத்தில் ஆதாரமாகுமா?

சட்டம்

← முந்தையஅடுதது →
கேள்வி
நபித்தோழர்களுடைய (ஸஹாபாக்களின்) மார்க்கத் தீர்ப்புகளை நாம் எவ்வாறு அணுக வேண்டும்? அது மார்க்கத்தில் ஆதாரமாகுமா?
பதில்
பதில்:

நபித்தோழர்களின் மார்க்கத் தீர்ப்புகளை ஆதாரமாகக் கொள்வது குறித்து ஆரம்ப கால மார்க்க அறிஞர்களிடையே சிறு கருத்து வேறுபாடுகள் இருந்துள்ளன. இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள், குர்ஆன் மற்றும் சுன்னாவிற்கு மட்டுமே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், நபித்தோழர்களின் தீர்ப்புகள் நேரடி ஆதாரமாகாது என்றும் கருதினார்கள். இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் (ரஹ்) போன்றவர்கள், குர்ஆன் சுன்னாவின் விளக்கங்களைப் புரிந்துகொள்வதில் சஹாபாக்களின் தீர்ப்புகள் உறுதுணையாக அமையும் எனக் கருதினார்கள்.

ஆனால், "குர்ஆனிலோ ஹதீஸிலோ இல்லை என்றால் சஹாபாக்களின் கூற்றைப் பார்க்க வேண்டும்" என்று குர்ஆன், ஹதீஸுக்கு நிகரான ஒரு மூலாதாரமாக சஹாபாக்களின் தீர்ப்புகளைக் கருதுவது முற்றிலும் வழிகேடாகும். குர்ஆனிலும் ஹதீஸிலும் நேரடியாகக் கூறப்படாத அல்லது பலவிதமாகப் புரிந்துகொள்ளக் கூடிய விஷயங்களில் (உதாரணமாக: தாடியை எவ்வளவு வளர்ப்பது என்ற சட்டத்தில் இப்னு உமர் (ரழி) அவர்கள் ஒரு பிடி பிடித்து வெட்டிய செயல்), நமது சொந்தப் புரிதலை விட நபித்தோழர்களின் புரிதலுக்கு முன்னுரிமை அளித்து, குர்ஆன் சுன்னாவிற்கு வலு சேர்க்கும் விதமாக அவர்களது தீர்ப்புகளைத் துணை ஆதாரமாகப் பயன்படுத்தலாமே தவிர, குர்ஆன் சுன்னாவிற்கு முரணாக எந்த நபித்தோழரின் தீர்ப்பும் மார்க்க ஆதாரமாக ஆகாது.

வீடியோ விளக்கம்
▶ YouTube-ல் காண்க
← முந்தையஅடுதது →