ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன்

நான் 65 மைல்கள் தூரத்தில் வேலை செய்கிறேன், திங்கள் சென்று வெள்ளிக்கிழமை தான் வீடு திரும்புவேன். நான் தொழுகைகளை ஜம்உ மற்ற

தொழுகை

← முந்தையஅடுதது →
கேள்வி
நான் 65 மைல்கள் தூரத்தில் வேலை செய்கிறேன், திங்கள் சென்று வெள்ளிக்கிழமை தான் வீடு திரும்புவேன். நான் தொழுகைகளை ஜம்உ மற்றும் கஸ்ர் செய்து தொழலாமா? மூன்று நாட்களுக்கு மேல் கஸ்ர் செய்யலாமா?
பதில்
பதில்:

ஜம்உ (சேர்த்துத் தொழுதல்): ஜம்உ செய்வதற்கு ஒருவர் பிரயாணியாக இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை; ஊரில் இருந்தாலும் நோய், மழை அல்லது தொழுகை தவறிவிடும் என்ற நியாயமான காரணங்கள் இருந்தால் தாராளமாக ஜம்உ செய்து தொழலாம்.

கஸ்ர் (சுருக்கித் தொழுதல்): கஸ்ர் செய்வதற்கு ஒரு நபர் கட்டாயம் பிரயாணியாக இருக்க வேண்டும். பிரயாணம் என்பதற்கு இத்தனை கிலோமீட்டர் தான் செல்ல வேண்டும் என்ற குறிப்பிட்ட எந்த அளவுகோலும் ஹதீஸ்களில் இல்லை; சமூக வழக்கப்படி (உர்ஃப்) எது பிரயாணம் எனக் கருதப்படுகிறதோ, அந்தத் தூரத்தைத் தாண்டிச் சென்றால் அவர் பிரயாணிதான். அவருக்குக் கஸ்ர் செய்ய முழு அனுமதி உண்டு.

அதேபோல, மூன்று நாட்களுக்கு மேல் கஸ்ர் செய்யக் கூடாது என்பதும் தவறானது. நீங்கள் ஒரு பிரயாணியாக இருக்கும் காலம் வரை (உதாரணமாக ஒரு மாதம் என்றாலும்) ஊர் திரும்பும் எண்ணம் வரும் வரை கஸ்ர் செய்து கொள்ளலாம். நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் ஒரு வாரத்திற்கு மேல் தங்கி கஸ்ர் செய்துள்ளார்கள். எனவே, ஊர் திரும்புவது வரை நீங்கள் தாராளமாக கஸ்ர் செய்யலாம். எனினும், அங்கு நீங்கள் உள்ளூர் ஜமாஅத்துடன் இணைந்து தொழுதால், இமாமைப் பின்பற்றி முழுமையாக (நான்கு ரக்அத்துகளாக)த் தொழ வேண்டும்.

வீடியோ விளக்கம்
▶ YouTube-ல் காண்க
← முந்தையஅடுதது →