கேள்வி
தொழில் செய்வதற்காகப் பார்ட்னராகச் சேர்ந்து முதலீடு செய்த பணத்திற்கு, இதுவரை எவ்வித லாபமும் கிடைக்கவில்லை என்றாலும் ஸகாத் கடமையாகுமா?
பதில்
பதில்:
ஆம், கட்டாயம் ஸகாத் கடமையாகும். நீங்கள் வியாபாரத்தில் முதலீடாகப் (Capital) போட்ட அந்தப் பணம், பத்தரை பவுன் தங்கத்தின் பெருமதியை அடைந்து, அந்த வியாபாரத்தில் ஒரு வருட காலம் நிறைவடைந்தால், லாபம் கிடைத்ததோ இல்லையோ அந்த முழுமையான பணத்திற்கும் நீங்கள் ஸகாத் கொடுத்தாக வேண்டும்.
அந்த முதலீடு என்பது உங்கள் கையிருப்பில் உள்ள உங்கள் வருமானப் பணமாகும். எனவே, ஒரு வருடம் பூர்த்தியாகி நிஸாபையும் அடைந்துவிட்டால், லாபம் வராவிட்டாலும் கட்டாயம் அதற்கு இரண்டரை சதவீதம் (2.5%) ஸகாத் வழங்க வேண்டும்.
வீடியோ விளக்கம்
▶ YouTube-ல் காண்க