ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன்

திங்கள், வியாழன் ஆகிய நாட்களில் நோற்கும் சுன்னத்தான நோன்புகள், ரமழானில் விடுபட்ட கழா நோன்புகளுக்குப் பகரமாக அமையுமா? (அத

நோன்பு

← முந்தையஅடுதது →
கேள்வி
திங்கள், வியாழன் ஆகிய நாட்களில் நோற்கும் சுன்னத்தான நோன்புகள், ரமழானில் விடுபட்ட கழா நோன்புகளுக்குப் பகரமாக அமையுமா? (அதாவது ஒரே நோன்பில் இரண்டு நன்மைகளையும் பெற்றுக்கொள்ள முடியுமா?)
பதில்
பதில்:

திங்கள், வியாழன் ஆகிய நாட்களில் நோற்கும் சுன்னத்தான நோன்புகள், ரமழானில் விடுபட்ட கழா நோன்புகளுக்குப் பகரமாக அமையாது. திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் நோற்கப்படும் நோன்பு என்பது பிரத்தியேகமான சுன்னத்தான நோன்பாகும்; கழா நோன்பு என்பதும் பிரத்தியேகமான கடமையான நோன்பாகும்.

ஒருவர் விடுபட்ட நோன்புகளைத் திங்கள் அல்லது வியாழக்கிழமைகளில் நோற்பதாக இருந்தால், "நான் விடுபட்ட கழா நோன்பை நோற்கிறேன்" என்ற தூய நிய்யத்துடன் மட்டுமே நோற்க வேண்டும். அவ்வாறு நோற்றால் கழா நோன்பு நிறைவேறிவிடும். ஆனால், ஒரே நோன்பில் "திங்கள் கிழமையின் சுன்னத்தான நோன்பின் சிறப்பும் கிடைக்க வேண்டும், அதேவேளை கழா நோன்பும் நிறைவேற வேண்டும்" என இரண்டு நிய்யத்துக்களையும் சேர்த்து வைப்பது மார்க்க ரீதியாகத் தவறான அணுகுமுறையாகும்.

சுன்னத்தான நோன்பின் கூலி சுன்னத்தான நிய்யத்துக்கும், கழா நோன்பின் கூலி கழா நிய்யத்துக்கும் மட்டுமே கிடைக்கும். இரண்டையும் ஒரே நோன்பில் சேர்த்துப் பெற்றுக்கொள்ளலாம் என்பதற்கு மார்க்கத்தில் எவ்வித ஆதாரமும் கிடையாது. கழா நோன்புகளைப் புதன், ஞாயிறு அல்லது வெள்ளி, சனி போன்ற ஏனைய நாட்களிலும் நோற்றுக்கொள்ளலாம். எனவே, இரண்டையும் தனித்தனியாகவே நிறைவேற்ற வேண்டும்.

வீடியோ விளக்கம்
▶ YouTube-ல் காண்க
← முந்தையஅடுதது →