கேள்வி
சிகரெட் புகைப்பவரது தொழுகை, நோன்பு மற்றும் ஏனைய நல்லறங்கள் ஏற்றுக்கொள்ளப்படுமா? அவர் அந்த நிலையில் மரணித்தால் நிலை என்ன?
பதில்
பதில்:
சிகரெட் புகைப்பது உடலுக்குத் தீங்கு விளைவிப்பதாலும், தற்கொலைக்குச் சமமான பாதிப்புகளை ஏற்படுத்துவதாலும் அது மார்க்க ரீதியாக ஹராம் (பெரும்பாவம்) ஆகும்.
இருப்பினும், ஒரு பாவம் செய்வதால் அவர் செய்கின்ற தொழுகை, நோன்பு போன்ற ஏனைய நற்காரியங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என்று மார்க்கத்தில் எங்கும் கூறப்படவில்லை. நன்மைகளுக்குரிய கூலியை இறைவன் வழங்குவான்; அதேவேளை அவர் செய்த பாவத்திற்குரிய குற்றமும் பதியப்படும்.
ஒருவர் சிகரெட் குடித்த நிலையிலேயே மரணித்தால், அவர் ஒரு பாவத்தோடு மரணிக்கிறார் என்பதே பொருளாகும். அவரை மன்னித்துச் சுவர்க்கத்தில் நுழைவிப்பதோ அல்லது தண்டிப்பதோ இறைவனின் நாட்டத்தைப் பொறுத்ததாகும். எனவே, பாவங்களில் ஈடுபாடுள்ளவர்கள் விரைவாகத் தவ்பா செய்து அதிலிருந்து மீள வேண்டும்.
வீடியோ விளக்கம்
▶ YouTube-ல் காண்க