கேள்வி
சஜ்தா ஸஹ்வு (மறதிக்கான சஜ்தா) செய்யும் முறை என்ன? எதற்கெல்லாம் இதனைச் செய்ய வேண்டும்?
பதில்
பதில்:
தொழுகையில் ஏற்படும் சில மறதிகளுக்குப் பரிகாரமாகச் செய்யப்படுவதே சஜ்தா ஸஹ்வு ஆகும். இதற்கெனப் பிரத்தியேகமான துஆக்கள் எதுவும் ஹதீஸ்களில் இல்லை; வழமையாக சுஜூதில் ஓதும் திக்ருகளையே ஓதிக்கொள்ளலாம்.
சஜ்தா ஸஹ்வு செய்யும் முறை:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரு முறைகளில் இதனைச் செய்துள்ளார்கள்:
1. இறுதி ஸலாம் கொடுப்பதற்கு முன்னால் இரண்டு சஜ்தாக்கள் செய்தல்.
2. இறுதி ஸலாம் கொடுத்த பின்னால் இரண்டு சஜ்தாக்கள் செய்து முடித்தல்.
எப்போது செய்ய வேண்டும்?
- வாஜிபுகள் விடுபட்டால்: முதல் அத்தஹிய்யாத் இருப்பு, அல்லது சூரா ஓதுதல் போன்ற வாஜிபான செயல்களை மறதியாக விட்டால், அந்த ரக்அத்தை மீட்க வேண்டியதில்லை; சஜ்தா ஸஹ்வு மட்டும் செய்தால் போதுமானது.
- ருக்குன்கள் விடுபட்டால்: ருகூஉ, சஜ்தா, அல்லது சூரத்துல் ஃபாத்திஹா ஓதுதல் போன்ற கட்டாயமான (ருக்குன்) செயல்களை விட்டால், விடுபட்ட அந்த ரக்அத்தை முழுமையாக மீட்டித் தொழுதுவிட்டு, அதன் பின் சஜ்தா ஸஹ்வு செய்ய வேண்டும்.
கூடுதலாக ஒரு ரக்அத்தையோ சுஜூதையோ செய்துவிட்டால் (கூடிவிட்டால்) ஸலாம் கொடுத்த பின் சஜ்தா ஸஹ்வு செய்வதும், ஏதேனும் ஒன்றை விட்டிருந்தால் (குறைந்துவிட்டால்) ஸலாம் கொடுப்பதற்கு முன் சஜ்தா ஸஹ்வு செய்வதும் சிறந்த முறையாகும்.
வீடியோ விளக்கம்
▶ YouTube-ல் காண்க