ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன்

நமது ஊர்களில் குற்றவியல் சட்டங்களை (உதாரணமாக, திருடினால் கை வெட்டுதல், சாராயம் குடித்தால் தண்டித்தல் போன்றவற்றை) மக்கள்

சட்டம்

← முந்தையஅடுதது →
கேள்வி
நமது ஊர்களில் குற்றவியல் சட்டங்களை (உதாரணமாக, திருடினால் கை வெட்டுதல், சாராயம் குடித்தால் தண்டித்தல் போன்றவற்றை) மக்கள் அனுமதியுடன் நடைமுறைப்படுத்தலாமா? ஊர் கட்டுப்பாடுகள் என்று சிலவற்றை வைக்கலாமா?
பதில்
பதில்:

கிரிமினல் (குற்றவியல்) சட்டங்களை நடைமுறைப்படுத்துவது என்பது ஒரு இஸ்லாமிய அரசால் (Islamic Government) மட்டுமே சாத்தியமானதாகும். இஸ்லாமிய அரசு அல்லாத ஒரு நாட்டில் அரசாங்கம் அனுமதித்தாலும் இதை மக்கள் கையில் எடுத்துச் செய்யக்கூடாது. குற்றவியல் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், பணக்காரன்-ஏழை, முஸ்லிம்-முஸ்லிம் அல்லாதவன் என்று எந்த வேறுபாடும் இன்றி அனைவருக்கும் பொதுவாகத் தண்டனை வழங்கப்பட வேண்டும். ஒரு முஸ்லிம் அல்லாதவன் திருடினால் அவனது கையை வெட்ட முடியாது; ஆனால் ஒரு முஸ்லிம் திருடினால் மட்டும் கையை வெட்டுகிறோம் என்று சொன்னால் அது அநீதியாகும். மேலும், விபச்சாரம், திருட்டு போன்றவற்றுக்குத் தண்டனை கொடுப்பதற்கு முன்பாக, அது போன்ற குற்றங்கள் நடக்காத ஒரு சமூக-பொருளாதாரச் சூழலை இஸ்லாம் உருவாக்கும். சாராயம், சினிமா, ஒழுக்கமற்ற ஆடைகள் என எல்லாவற்றையும் திறந்து வைத்துவிட்டு, தண்டனையை மட்டும் நடைமுறைப்படுத்த முடியாது. எனவே இஸ்லாமிய ஆட்சியின் கீழ்தான் இது முழுமையாகச் செய்யப்பட வேண்டும்.

ஆனால், ஊர் சட்டங்கள் அல்லது கட்டுப்பாடுகள் என்ற பெயரில் மார்க்கத்திற்கு முரணான காரியங்களை நடக்கவிடாமல் தடுப்பதற்கு ஊர் மக்களும் நிர்வாகமும் சேர்ந்து ஒரு உடன்பாட்டிற்கு வர மார்க்கத்தில் தாராளமாக அனுமதி உள்ளது. உதாரணமாக, சாராயம் குடிப்பவர்களுக்குப் பள்ளியில் ஜனாஸாத் தொழுகை நடத்த மாட்டோம் என்று பள்ளி நிர்வாகம் கட்டுப்பாடு கொண்டுவரலாம். இதற்கு முன்மாதிரியாக, கடனாளிகளுக்கும், தற்கொலை செய்தவருக்கும் ரசூல் (ஸல்) அவர்கள் ஜனாஸாத் தொழுகை நடத்தாமல் தவிர்த்தார்கள். இதன் மூலம் ஊர் மக்களை ஒழுங்குபடுத்தலாம். எந்தவொரு தீமையையும் தவிர்ந்து கொள்வதற்கும், நன்மையை வளர்த்துக் கொள்வதற்கும் ஊர் மக்களாக இணைந்து இவ்வாறான மார்க்கம் தடை செய்யாத வழிமுறைகளைக் கொண்டு வரலாம்.

வீடியோ விளக்கம்
▶ YouTube-ல் காண்க
← முந்தையஅடுதது →