கேள்வி
குர்ஆன் ஓதுவதற்கென பிரத்தியேகமாக WhatsApp குழுமம் (Group) தொடங்கி, யார் எவ்வளவு ஓதினார்கள் எனப் பகிர்ந்து கொள்வது கூடுமா?
பதில்
பதில்:
இவ்வாறான நடைமுறைகளைத் தவிர்த்துக்கொள்வது மிகவும் சிறந்தது. ஒருவருக்கொருவர் குர்ஆன் ஓதுவதற்கு ஆர்வமூட்டுவது தவறல்ல; ஆனால், "நான் இவ்வளவு ஓதிவிட்டேன், நீங்கள் இவ்வளவு ஓதவில்லை" எனப் பகிர்ந்துகொள்வதும் குழுக்களில் பதிவு செய்வதும், எமது இக்லாஸை (உளத்தூய்மையை) பாதிக்கும்.
பிறர் என்ன நினைப்பார்களோ என்பதற்காக ஓதுவதற்கும், ஓதாத நிலையில் ஓதிவிட்டதாகப் பொய் சொல்வதற்கும் இது தூண்டுகோலாக அமையலாம். மாறாக, குர்ஆன் வசனங்களின் பொருளையும் விளக்கங்களையும் கற்பதற்காகக் குழுக்கள் அமைப்பது சிறந்தது.
அதைவிடுத்து, ஓதிய அளவைப் பகிர்ந்து கொள்வது போன்ற வரம்புகளை நாமாகவே ஏற்படுத்திக் கொண்டு அமல் செய்வது, அந்த அமல்கள் இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படுவதைக் கேள்விக்குறியாக்கிவிடும்.
வீடியோ விளக்கம்
▶ YouTube-ல் காண்க