கேள்வி
காட்டில் தனிமையில் வேலை செய்பவர் தனித்துத் தொழுதால் ஜமாஅத் தொழுகையின் கூலி கிடைக்குமா?
பதில்
பதில்:
ஒருவர் யாரும் இல்லாத காட்டில், அல்லது காற்று வீசும் தனிமையான ஒரு சூழலில் வேலை செய்து கொண்டிருக்கிறார். அங்கே அவர் தொழுகைக்காகத் தனியாக அதான் சொல்லி, இகாமத் சொல்லி, அல்லாஹ்வுக்கு சிரம் தாழ்ந்து, பாவமன்னிப்பு தேடித் தொழுதால், அல்லாஹுத்தஆலா அவரைப் பார்த்து மிகவும் சந்தோஷப்படுகிறான்.
"என் அடியான் எனக்காக அதான் சொல்லித் தொழுகிறான்" என்று இறைவன் பெருமைப்படுகிறான். எனவே, இப்படிப்பட்ட தனிமையான சூழலில் அவர் தொழுதால், ஜமாஅத்தோடு தொழுபவர்களுக்குக் கிடைக்கக்கூடிய நன்மைகளை விட வேறு வகையான பல மகத்தான கூலிகள் அவருக்கு அந்த இடத்தில் நிச்சயமாக உண்டு என்று ஹதீஸ்களில் பார்க்கிறோம்.
வீடியோ விளக்கம்
▶ YouTube-ல் காண்க