Dr. ஷேக் முபாரக் மதனி

தொழுகையில் ஸுஜூதில் இருக்கும்போது தமிழில் (தாய்மொழியில்) துஆ கேட்க முடியுமா? எந்த மொழியில் அல்லாஹ்விடம் கேட்க வேண்டும்?

தொழுகை சுஜூத் துஆ தமிழ்

← முந்தைய
கேள்வி
தொழுகையில் ஸுஜூதில் இருக்கும்போது தமிழில் (தாய்மொழியில்) துஆ கேட்க முடியுமா? எந்த மொழியில் அல்லாஹ்விடம் கேட்க வேண்டும்?
பதில்
பதில்:

ஒரு அடியான் அல்லாஹ்வுக்கு மிக நெருக்கமாக இருக்கிற நிலை ஸுஜூதுடைய நிலையாகும். அதில் அதிகமாக துஆ கேளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஸுஜூதில் துஆ கேட்பதற்காகத் தனியாக ஒரு ஸுஜூது செய்ய வேண்டியதில்லை; மாறாக, தொழுகையில் (ஃபர்ளு அல்லது சுன்னத்) வரக்கூடிய ஸுஜூதிலேயே துஆ கேட்க வேண்டும்.

ஸுஜூதில் எந்த மொழியில் துஆ கேட்க வேண்டும் என்பதில் அறிஞர்களிடையே இருவேறு கருத்துக்கள் உள்ளன. அதிகமான அறிஞர்கள், தொழுகையின் மொழி அரபு என்பதால் ஸுஜூதிலும் அரபியில்தான் துஆ கேட்க வேண்டும், வேறு மொழியில் கேட்டால் தொழுகை பாழாகிவிடும் என்கிறார்கள். ஆனால், இரண்டாவது கருத்து மிக இலகுவானதும் நடைமுறைக்குப் பொருத்தமானதுமாகும்: ஸுஜூதில் "ஸுப்ஹான ரப்பியல் அஃலா" போன்ற திக்ருகளை கட்டாயம் அரபியில்தான் சொல்ல வேண்டும்; அதைச் சொல்லிவிட்டு, ஒருவருக்குத் தெரிந்த மொழியில் (தமிழ் போன்ற தாய்மொழியில்) அவர் துஆ கேட்கலாம். அரபு மொழி தெரியாத கோடிக்கணக்கான முஸ்லிம்களுக்கு இந்தச் சலுகை இல்லாவிட்டால் அந்தப் பாக்கியம் கிடைக்காமலேயே போய்விடும். எனவே, அரபியில் சொல்ல வேண்டிய திக்ரைச் சொல்லிவிட்டுத் தாய்மொழியில் துஆ கேட்பதில் தவறில்லை. உங்களுக்கு அதில் மனத்திருப்தி இல்லையென்றால் அரபியிலேயே கேட்கலாம், அல்லது தொழுகைக்குப் பின்னால் கேட்கலாம்.

← முந்தைய