Dr. ஷேக் முபாரக் மதனி

ஜக்காத்தை ஒருவருக்கே முழுமையாகக் கொடுத்தால் நன்மை அதிகமா? அல்லது பல பேருக்குப் பிரித்துக் கொடுத்தால் நன்மை அதிகமா?

ஸகாத் ஏழைகள் சட்டம் வட்டி

← முந்தையஅடுதது →
கேள்வி
ஜக்காத்தை ஒருவருக்கே முழுமையாகக் கொடுத்தால் நன்மை அதிகமா? அல்லது பல பேருக்குப் பிரித்துக் கொடுத்தால் நன்மை அதிகமா?
பதில்
பதில்:

நமது ஜக்காத் தொகையின் அளவைப் பொறுத்தே அதனை எத்தனை பேருக்குக் கொடுப்பது என்பதைத் தீர்மானிக்க வேண்டும். ஒருவருக்கோ அல்லது பலருக்கோ பிரித்துக் கொடுப்பது அவரவர் விருப்பத்தைப் பொறுத்ததாகும். ஆனால், பெரும்பாலான அறிஞர்களின் கருத்துப்படி, ஒருவருக்கு ஜக்காத் கொடுக்கும்போது அவரும் அவருடைய குடும்பமும் ஒரு வருடத்திற்கு வாழ்க்கை நடத்தத் தேவையான (கிஃபாயா) முழுத் தொகையையும் அவருக்குக் கொடுப்பதே மிகச் சிறந்ததாகும். இதன் மூலம் அவருடைய ஒரு வருடத் தேவை பூர்த்தியாகும்.

அதே நேரத்தில், வாங்குபவர்கள் தன்னிறைவு அடைந்த பிறகும் "நாங்கள் ஜக்காத்திற்குத் தகுதி இல்லை" என்று கூறாமல் தொடர்ந்து வாங்கிக் கொண்டிருப்பார்கள் என்ற சூழல் இருக்குமாக இருந்தால், ஒருவருக்கு முழுத் தொகையையும் கொடுக்காமல் தேவையுள்ள பலருக்கும் பிரித்துக் கொடுப்பது சிறந்ததாகும்.

← முந்தையஅடுதது →