Dr. ஷேக் முபாரக் மதனி

வுழூவுடன் இருக்கும்போது குழந்தை மலம் கழித்தால், அதை சுத்தம் செய்வதனால் வுழூ முறியுமா? மீண்டும் வுழூ செய்ய வேண்டுமா?

வுழூ தூய்மை மலம் குழந்தை

← முந்தையஅடுதது →
கேள்வி
வுழூவுடன் இருக்கும்போது குழந்தை மலம் கழித்தால், அதை சுத்தம் செய்வதனால் வுழூ முறியுமா? மீண்டும் வுழூ செய்ய வேண்டுமா?
பதில்
பதில்:

மக்கள் மத்தியில் நஜீஸான (அசுத்தமான) பொருட்கள் உடம்பிலோ அல்லது ஆடையிலோ பட்டால் வுழூ முறிந்துவிடும் என்ற ஒரு தவறான புரிதல் நிலவுகிறது. மார்க்கம் அடையாளப்படுத்தியுள்ள வுழூவை முறிக்கக்கூடிய காரியங்களின் பட்டியலில், நஜீஸ் நம்முடைய உடம்பிலோ அல்லது கையிலோ படுவது இடம்பெறவில்லை.

எனவே, நீங்கள் வுழூவுடன் இருக்கும்போது உங்களுடைய குழந்தை மலம் கழித்துவிட்டாலோ அல்லது சிறுநீர் கழித்துவிட்டாலோ, அதை நீங்கள் தாராளமாகக் கழுவிச் சுத்தம் செய்யலாம். அந்த நஜீஸ் உங்கள் கைகளில் படுவதனால் உங்கள் வுழூ ஒருபோதும் முறிந்துவிடாது. குழந்தையைச் சுத்தம் செய்துவிட்டு, உங்கள் கைகளை மட்டும் நன்றாகக் கழுவிக்கொண்டாலே போதுமானது. மீண்டும் புதிதாக வுழூ செய்ய வேண்டிய அவசியமில்லை; பழைய வுழூ அப்படியே இருக்கும்.

← முந்தையஅடுதது →