விரல்களில் நெட்டி முறிப்பது சைத்தானுடைய செயல் என்று மக்கள் மத்தியில் ஒரு பொதுவான கருத்து நிலவினாலும், அதற்கென எவ்வித மார்க்க ஆதாரங்களும் கிடையாது.
ஆனால், தொழுகையில் இருக்கும்போது நெட்டி முறிப்பதைப் பொறுத்தவரையில், இப்னு அப்பாஸ் (ரலி) போன்ற சஹாபாக்களும், பெரும்பாலான இமாம்களும் இதை ஒரு வெறுக்கத்தக்க (மக்ரூஹான) செயல் என்றே கூறியுள்ளனர். ஏனெனில், அது ஒரு வீணான காரியமாகும்; தொழுகையினுடைய குஷூஉ (இறையச்சம்), உயிரோட்டத்தைப் பாதிக்கக்கூடிய அம்சமாகும். இருப்பினும், ஒருவேளை அறியாமல் நெட்டி முறித்துவிட்டால் அதற்காகத் தொழுகை பாழாகிவிடாது.
தொழுகைக்கு வெளியே (சாதாரணமாக இருக்கும்போது) நெட்டி முறிப்பது ஹராம் என்று எந்தத் தடையும் இல்லாவிட்டாலும், அது ஒரு நல்ல ஆரோக்கியமான நடைமுறையாகப் பார்க்கப்படாததாலும், ஒரு நற்பண்பு (Manners) என்ற அடிப்படையிலும் அதைத் தவிர்த்துக் கொள்வதே மிகவும் சிறந்ததாகும். ஆனால் ஒருவர் அவ்வாறு செய்தால் அவரை ஏதோ பெரும் பாவம் செய்தவரைப் போலப் பார்க்க வேண்டிய அவசியமில்லை.