Dr. ஷேக் முபாரக் மதனி

திருமணம் முடித்த மணமகன் கொடுக்கும் வலீமா விருந்தில் பெண் வீட்டாரும் இணைந்து பங்களிப்பு செய்யலாமா?

வலீமா திருமணம் விருந்து பெண் வீட்டார்

← முந்தையஅடுதது →
கேள்வி
திருமணம் முடித்த மணமகன் கொடுக்கும் வலீமா விருந்தில் பெண் வீட்டாரும் இணைந்து பங்களிப்பு செய்யலாமா?
பதில்
பதில்:

வலீமா என்பது இஸ்லாத்தில் வலியுறுத்தப்பட்ட ஒரு சுன்னாவாகும். திருமண வாழ்வில் நுழைந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிற ஒரு நிகழ்வாகவே இஸ்லாம் அதைப் பார்க்கிறது. இந்த வலீமாவை மணமகன் தனது சக்திக்கு உட்பட்டவரை அமைத்துக் கொள்வதையே இஸ்லாம் விரும்புகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒட்டகம் அறுத்தும் வலீமா கொடுத்துள்ளார்கள், விருந்தே இல்லாமல் சில உணவுப் பதார்த்தங்களை வைத்தும் வலீமா கொடுத்துள்ளார்கள். ஒரு ஆட்டையேனும் அறுத்து வலீமா கொடுக்குமாறு சஹாபாக்களை வலியுறுத்தியுள்ளார்கள்.

எனவே மணமகன் தன் வசதிக்கேற்ப வலீமாவை அளிக்க வேண்டும். சில நேரங்களில் மணமகளின் குடும்பத்தினர் தாங்களாகவே விரும்பி மணமகனின் வலீமாவிற்கு உதவி செய்கிறோம், பங்களிப்பு தருகிறோம் என்று முன்வந்தால், அதை ஏற்றுக்கொள்வதோ அல்லது தவிர்ப்பதோ மணமகனின் விருப்பத்தைப் பொறுத்தது. அவர்கள் மனம் விரும்பி அளிக்கும் பங்களிப்பை மார்க்கம் தடை செய்கிறது என்று கூற எந்த ஆதாரங்களும் கிடையாது. எனவே பெண் வீட்டார் தாங்களாகவே விரும்பி வலீமாவில் பங்களிப்பு செய்தால் அது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்றாகும்.

← முந்தையஅடுதது →