Dr. ஷேக் முபாரக் மதனி

\nருகூஉ, சுஜூதை முறையாக (நிதானமாக) செய்யாத இமாமுடன் தொழுவதன் சட்டம் என்ன?

தொழுகை ருகூஉ சுஜூத் நிதானம்

← முந்தையஅடுதது →
கேள்வி
\nருகூஉ, சுஜூதை முறையாக (நிதானமாக) செய்யாத இமாமுடன் தொழுவதன் சட்டம் என்ன?
பதில்
பதில்:\n

முதலாவதாக, இமாம்கள் அல்லாஹ்வை பயந்து கொள்ள வேண்டும். தொழுவிக்க முன்னால் போகிறார்கள் என்றால் அவர்களிடம் ஒரு பெரிய பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது. அதிலே மிகக் கவனமாக அவர்கள் இருந்து கொள்ள வேண்டும். ருகூஉவில் 'ஸுப்ஹான ரப்பியல் அளீம்' என்று குறைந்தது மூன்று தடவைகள் சொல்வதும், சுஜூதில் 'ஸுப்ஹான ரப்பியல் அஃலா' என்று மூன்று தடவைகள் சொல்வதும் சுன்னத். அந்த அளவுக்கு நேரமாவது நிதானமாக இருக்க வேண்டும். அதற்குக் கூட நேரம் தராத ஒரு இமாம் அவசரமாக தொழுவித்தால், அந்த இமாமை மாற்ற வேண்டும் அல்லது அதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

\n

இரண்டாவதாக, நமக்கு தற்செயலாக அந்த இமாமுக்கு பின்னால் தொழக்கூடிய வாய்ப்பு கிடைத்தால், நாம் குறைந்தது 'ஸுப்ஹான ரப்பியல் அளீம்' மற்றும் 'ஸுப்ஹான ரப்பியல் அஃலா' என்று ஒரு தடவையாவது சொல்லுகிற அளவுக்காவது தாமதித்து எழுந்து இமாமைப் பின்பற்றினால் (ஃபாலோ பண்ணினால்) நம்முடைய தொழுகை சரியாகிவிடும்.

← முந்தையஅடுதது →