Dr. ஷேக் முபாரக் மதனி

\nமையவாடிகளிலே (கபருஸ்தான்களிலே) ஜனாஸா தொழுகையை நிறைவேற்றலாமா?

ஜனாஸா தொழுகை மரணம் கபருஸ்தான் சட்டம்

← முந்தையஅடுதது →
கேள்வி
\nமையவாடிகளிலே (கபருஸ்தான்களிலே) ஜனாஸா தொழுகையை நிறைவேற்றலாமா?
பதில்
பதில்:\n

ஜனாஸா தொழுகை முஸ்லிம்கள் மீது கடமையாக்கப்பட்ட ஒரு ஃபர்ளு கிஃபாயாவாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய காலத்திலே மஸ்ஜிதுக்கு வெளியே ஒரு திறந்த இடத்தை ஒதுக்கி அந்த இடத்திலே தான் ஜனாஸா தொழுகை நிறைவேற்றப்பட்டு கொண்டு வந்தது. இதிலிருந்து ஜனாஸா தொழுகைக்குரிய மிகப் பொருத்தமான இடம் பள்ளிவாசலுக்கு வெளியே ஒரு திறந்த இடம் என்பது புரிகிறது. அதே நேரத்தில் மஸ்ஜிதிலும் ஜனாஸா தொழுகை நிறைவேற்றலாம். நபி (ஸல்) அவர்கள் மற்றும் சஹாபாக்களின் காலத்திலும் மஸ்ஜிதிலே ஜனாஸா தொழுகை நிறைவேற்றப்பட்டிருக்கிறது. மூன்றாவதாக ஜனாஸா தொழுகை ஒருவருக்கு மஸ்ஜிதிலோ அல்லது திறந்த வெளியிலோ தவறிவிட்டது என்று சொன்னால் ஜனாஸாவை அடக்கம் செய்த பிறகு அவர் மையவாடிக்கு (கபருஸ்தானுக்கு) சென்று அந்த ஜனாஸா தொழுகையை நிறைவேற்றுவதற்கு மார்க்கத்திலே அனுமதி இருக்கிறது. நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு செய்திருக்கிறார்கள்.

\n

ஆனால் ஜனாஸாவை அடக்குவதற்கு முன்னர் ஜனாஸாவை மையவாடியிலே கபருஸ்தானிலே கொண்டு போய் வைத்து அங்கே ஜனாஸா தொழுகையை தொழுவிக்கலாமா என்பதை பொறுத்தவரையில் இதிலே உலமாக்கள் மத்தியிலே இரண்டு அபிப்பிராயங்கள் காணப்படுகின்றன. சில அறிஞர்கள் அவ்வாறு தொழுவது கூடாது அது இஸ்லாத்திலே வெறுக்கப்பட்ட ஒரு விஷயம் என்று கூறுகிறார்கள். இன்னும் ஒரு சாரார் அவ்வாறு தொழுவது மார்க்கத்திலே தடை கிடையாது என்று கூறுகிறார்கள்.

\n

இந்த இரண்டு கருத்துக்களையும் ஒன்று சேர்த்து பார்க்கிற போது நாம் ஒரு முடிவுக்கு வரலாம். அதாவது ஜனாஸா தொழுகையை மஸ்ஜிதிலோ அல்லது திறந்த வெளியிலோ தொழுவதுதான் மிகவும் சிறந்தது. ஒரு தவிர்க்க முடியாத சூழ்நிலையில் கபருஸ்தானிலே ஜனாஸா தொழுகை தொழுவிக்க வேண்டிய ஒரு சூழல் வந்தால், அவ்வாறு தொழுவிக்கப்படுமாக இருந்தால் அது ஒரு பாவமாக கருதப்பட மாட்டாது. இருந்தாலும் முடியுமானவரை கபருஸ்தானிலே ஜனாஸா தொழுகையை நிறைவேற்றுவதை தவிர்த்து கொள்வதே சிறந்ததாகும்.

← முந்தையஅடுதது →