Dr. ஷேக் முபாரக் மதனி

\nமீசையை வழிப்பது ஹராமா?

மீசை வழிப்பது உணவு சுன்னத்

← முந்தையஅடுதது →
கேள்வி
\nமீசையை வழிப்பது ஹராமா?
பதில்
பதில்:\n

ஆண்களுக்கு மீசை தாடி என்பது இயற்கையாக வளரக்கூடிய ஒன்றாக இருக்கிறது. இதிலே தாடியை வளர்க்க வேண்டும் மீசையை கத்தரிக்க வேண்டும் என்கிற ஒரு அம்சம் பொதுவாகவே முஸ்லிம் சமுதாயத்தில் பாரம்பரியமாக அறியப்பட்டு வரக்கூடிய ஒன்றாக இருக்கிறது. புகாரி முஸ்லிமிலே பதிவு செய்யப்பட்டிருக்கிற ஒரு ஹதீஸிலே நபி (ஸல்) அவர்கள் ஐந்து விஷயங்கள் இயற்கையான சுன்னாக்களில் உள்ளவை என்று சொல்கிறார்கள். அதிலே ஒன்றாக 'கஸ்ஸுஷ் ஷாரிப்' (மீசையை கத்தரிப்பது) என்ற செய்தியை அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

\n

இந்த சுன்னாவை ஹயாத் ஆக்க வேண்டும் பின்பற்ற வேண்டும் என்கிற ஆர்வத்தில் இதுபற்றி ஆய்வு செய்த இமாம்கள் இரண்டு கருத்துக்களை முன்வைக்கிறார்கள். ஹனஃபி மத்ஹப் சார்ந்த உலமாக்கள் மீசையை வழிப்பதுதான் சிறந்தது சுன்னா என்று சொல்கிறார்கள். அதற்கு ஆதாரமாக மீசை தொடர்பாக வரக்கூடிய ஹதீஸ்களிலே 'இஹ்ஃபா', 'இன்ஹாக்' என்கிற சொற்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன, அவை வழிப்பதைத் தான் சுட்டிக்காட்டுகின்றன என்கிற கருத்தை முன் வைக்கிறார்கள். ஏனைய உலமாக்களில் பலர் அப்படியல்ல, மீசையை கத்தரிப்பதுதான் அங்கே நாடப்படுகிறது, கத்தரிக்கிற போது கொஞ்சம் டீப்பாக கத்தரித்துக் கொள்வது (ஷார்ட் ஆக்கி கொள்வது) என்ற கருத்தைதான் அந்த வார்த்தைகளின் மூலம் புரிய முடிகிறது என முன்வைத்து கத்தரிப்பதே சுன்னா என்கிறார்கள். இவர்களுடைய கருத்துப்படி வழிப்பது என்பது மக்ரூஹ் என்று சொல்கிறார்கள்.

\n

ஆனால் பொதுவாக மீசையை வழிப்பது ஹராம் என்கிற ஒரு தீர்ப்பை யாருமே வழங்கவில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே முடியுமானவரை அதை ஒவ்வொருவரும் அவருடைய வசதிக்கேற்ப கத்தரித்துக் கொள்வது சிறந்தது. ஒருவர் அதை தாண்டி வழித்தால் அவர் பாவம் செய்கிறார் தவறு செய்கிறார் என்று சொல்ல முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

← முந்தையஅடுதது →