Dr. ஷேக் முபாரக் மதனி

மரணித்தவர்களை அடிக்கடி கனவில் காண்பதன் அர்த்தம் என்ன?

கனவு மரணம் ஆழ்மனப்பதிவு சைத்தான்

← முந்தையஅடுதது →
கேள்வி
மரணித்தவர்களை அடிக்கடி கனவில் காண்பதன் அர்த்தம் என்ன?
பதில்
பதில்:

இஸ்லாத்தில் கனவுகள் மூன்று வகைப்படும்: இறைவனிடமிருந்து வரும் நல்ல கனவு, சைத்தானிடமிருந்து வரும் கெட்ட கனவு, மற்றும் ஆழ்மனப் பதிவுகள் (அடிக்கடி நினைப்பதனால் வருவது). மரணித்த ஒருவரை கனவில் காணும்போது, அது ஒரு நல்ல செய்தியாக இருந்தால் அது நன்மாராயமாகும். பயமுறுத்தும் கெட்ட கனவாக இருந்தால் அது சைத்தானின் ஊசலாட்டம்; அதற்காக இடப்பக்கம் மூன்று முறை துப்பி அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேட வேண்டும், யாரிடமும் கூறக்கூடாது.

மரணித்தவரைப் பற்றி அடிக்கடி நினைப்பதனால் அவர் கனவில் தோன்றினால் அது ஆழ்மனப் பதிவாகும். மரணித்தவரைக் கனவில் கண்டதற்காக அவருக்கு பிரத்தியேகமாக சதக்கா செய்வதோ, கத்தம் ஓதுவதோ, அல்லது மௌலவிகளை அழைத்து ஓதுவதோ மார்க்கத்தில் கிடையாது. எனவே, இவ்வாறான கனவுகளைக் கண்டு வீணாகக் குழம்பத் தேவையில்லை.

← முந்தையஅடுதது →