Dr. ஷேக் முபாரக் மதனி

திருமணமாகிக் கணவனை இழந்த அல்லது விவாகரத்தான ஒரு பெண்ணை ஒருவர் திருமணம் செய்தால், அந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே பிறந்த பெண் க

திருமணம் மஹ்ரம் வாரிசு சட்டம்

← முந்தையஅடுதது →
கேள்வி
திருமணமாகிக் கணவனை இழந்த அல்லது விவாகரத்தான ஒரு பெண்ணை ஒருவர் திருமணம் செய்தால், அந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே பிறந்த பெண் குழந்தை இவருக்கு மஹ்ரம் ஆகுமா?
பதில்
பதில்:

ஆம், திருமணம் முடித்துச் சேர்ந்த மனைவியின் முந்தைய கணவனுக்குப் பிறந்த பெண் பிள்ளைகள், புதிய கணவனுக்கு நிரந்தர மஹ்ரம் ஆவார்கள். இதனை அல்குர்ஆன் (4:23) மிகத் தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறது. புதிய கணவன் அந்தப் பெண்ணோடு தாம்பத்திய (குடும்ப) வாழ்க்கையில் இணைந்துவிட்டால், அந்தப் பெண்ணின் முந்தைய குழந்தை இவருக்கு நிரந்தர மஹ்ரமாக ஆகிவிடுவாள். எனவே, ஒரு தந்தைக்கும் மகளுக்கும் இடையில் உள்ள மார்க்க உறவுமுறைகளை அவர்கள் தாராளமாகப் பேணிக் கொள்ளலாம்.

அதேநேரத்தில், இந்தப் புதிய கணவனுடைய சொத்துகளில் இருந்து அந்தப் பெண் குழந்தைக்குச் சட்டப்பூர்வமான எவ்விதப் பங்கும் (வாரிசுரிமை) கிடையாது. எனினும், மனிதாபிமான அடிப்படையிலும் இஸ்லாமிய வழிகாட்டலின்படியும் அக்குழந்தையின் தேவைகளைக் கவனித்து உதவி செய்வதை இஸ்லாம் ஆர்வமூட்டுகிறது. மேலும், இந்தக் கணவருக்கு ஏற்கனவே முந்தைய திருமணத்தின் மூலம் ஆண் பிள்ளைகள் இருந்தால், அந்த ஆண் பிள்ளைகள் இந்தப் பெண் குழந்தைக்கு மஹ்ரம் ஆக மாட்டார்கள் (அவர்கள் ஒருவரை ஒருவர் திருமணம் செய்ய அனுமதி உண்டு) என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

← முந்தையஅடுதது →