Dr. ஷேக் முபாரக் மதனி

திருமணம் பேசி வைக்கப்பட்டுள்ள பெண்ணோடு குறிப்பிட்ட காலத்திற்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசலாமா?

திருமணம் பேசி முடித்தல் தொலைபேசி உரையாடல் அந்நியர்

← முந்தையஅடுதது →
கேள்வி
திருமணம் பேசி வைக்கப்பட்டுள்ள பெண்ணோடு குறிப்பிட்ட காலத்திற்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசலாமா?
பதில்
பதில்:

திருமணம் பேசி வைக்கப்பட்டுள்ள நிலை என்பதை இரண்டு விதமாகப் பிரிக்கலாம். முதலாவதாக, திருமணம் பேசி முடிக்கப்பட்டு அக்துன் நிக்காஹ் (திருமண ஒப்பந்தம்) நிறைவடைந்திருந்தால், அவர்கள் இருவரும் இஸ்லாமிய அடிப்படையில் கணவன்-மனைவியாகக் கருதப்படுவார்கள். அவர்கள் தாம்பத்தியத்தில் இணையாமல் இருந்தாலும், தாராளமாக நேரில் சந்திக்கலாம், தொலைபேசி மற்றும் வீடியோ அழைப்புகளில் பேசிக்கொள்ளலாம்; இதில் எவ்விதத் தடையுமில்லை.

இரண்டாவதாக, திருமணம் பேசி நிச்சயிக்கப்பட்ட நிலையில் (Proposal), இன்னும் அக்துன் நிக்காஹ் (திருமண ஒப்பந்தம்) நிறைவேறாமல் இருந்தால், அவர்கள் இருவரும் மார்க்க அடிப்படையில் அந்நியர்களே (அஜ்னபிகளே). கணவன்-மனைவி என்ற உறவு இன்னும் ஏற்படவில்லை. எனவே, அந்நிய ஆடவரும் பெண்டிரும் எவ்வாறு இஸ்லாமிய வரையறைகளைப் பேணிப் பழக வேண்டுமோ, அதே வரையறைகளுடன்தான் இவர்களும் பழக வேண்டும்.

இன்றைய காலத்தில், நிக்காஹ் நடப்பதற்கு முன்பாகவே திருமணம் பேசி முடிக்கப்பட்டவர்கள் நீண்ட நேரம் தொலைபேசியிலும், வீடியோ அழைப்புகளிலும் பேசுவது பரவலாகக் காணப்படுகிறது. இது மார்க்கத்தில் முற்றிலும் தடைசெய்யப்பட்ட செயலாகும். இத்தகைய பழக்கங்கள் மிக மோசமான பாவங்களுக்கு இட்டுச் செல்லக்கூடிய ஆபத்தான வழிகேடாகும்.

← முந்தையஅடுதது →