பெண்களுடைய ஜனாஸாக்களை ஆண்களும் ஆண்களுடைய ஜனாசாக்களை பெண்களும் பார்க்கலாமா என்ற ஒரு கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது [21]. அன்புள்ள சகோதர சகோதரிகளே இந்த கேள்வியை பொறுத்தவரையில் பொதுவாக மஹரமான நெருக்கமான உறவினர்கள் மரணித்தால் அவர்களுடைய ஜனாஸாக்களை ஆண்களும் பெண்களும் பார்ப்பதிலே எந்தவிதமான பிரச்சனையும் கிடையாது [21]. கணவன் மௌத் ஆகிறார் அவருடைய ஜனாஸாவை மனைவி பார்க்கலாம் [21]. அந்த இந்த சகோதரருடைய ஜனாஸாவை அவருடைய தாய் உடன்பிறந்த சகோதரிகள் அதேபோன்று திருமணம் முடிப்பதற்கு தடை செய்யப்பட்ட மஹரமான உறவினர்கள் அனைவரும் பார்ப்பதிலே எந்தவிதமான தடையும் கிடையாது தாராளமாக அது அனுமதிக்கப்பட்டதாகும் [21]. அதேபோலதான் ஒரு பெண் மரணிக்கிற போது அந்த பெண்ணுடைய மஹரமான உறவினர்கள் அந்த பெண்ணுடைய கணவன் அந்த பெண்ணுடைய ஜனா வை பார்ப்பதிலே தடை கிடையாது [21]. சில நேரங்களில் அவர்கள் குளிப்பாட்ட வேண்டிய சூழ்நிலை வந்தால் கூட கணவன் மனைவியுடைய ஜனாஸாவையும் மனைவி கணவனுடைய ஜனாஸாவையும் கூட குளிப்பாட்டுவதற்கு மார்க்கத்திலே அனுமதி இருக்கிறது [21].
ஆனால் மஹரமான உறவு அல்லாதவர்கள் அவர்கள் ஜனாஸாக்களை பார்ப்பதை பொறுத்தவரையில் உயிரோடு இருக்கும் போது என்ன சட்டமோ அதே சட்டம்தான் அவர்களுக்கு மௌத்தான பிறகு என்பதை நாம் புரிந்து கொள்ள கடமைப்பட்டிருக்கிறோம் [22]. ஒரு அந்நிய பெண்ணை உயிரோடு இருக்கும்போது எப்படி தனிமையிலே வைத்து நாம் அவர்களை பார்க்க முடியாதோ அதே போன்ற சட்டம்தான் மரணித்த பிறகும் இருக்கிறது என்பதை நாம் கவனத்திலே கொள்ள வேண்டும் [22]. எனவே அந்நிய சகோதரி ஒருவர் மரணித்து விட்டால் அவருடைய ஜனாஸாவை பார்ப்பதற்கு அந்நிய ஆண்கள் போகக்கூடாது பார்க்க கூடாது என்பதையும் அதேபோல அந்நிய ஆணுடைய ஜனாஸாக்களை ஆண்களுடைய ஜனாஸாக்களை பெண்கள் அந்நிய பெண்கள் பார்ப்பதை தவிர்த்து கொள்வதும் மார்க்க கடமை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் [22]. வல்லாஹுத்தஆலா ஆலம் [22].
(