Dr. ஷேக் முபாரக் மதனி

நடத்தை கெட்ட மனைவியை என்ன செய்வது?

நடத்தை மனைவி கணவன் தலாக்

← முந்தையஅடுதது →
கேள்வி
நடத்தை கெட்ட மனைவியை என்ன செய்வது?
பதில்
பதில்:

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ அல்ஹம்துலில்லாஹ் ஸலாத்து வஸலாம் அலா ரசூலில்லாஹ் அம்மாபாத் நடத்தை கெட்ட மனைவியை என்ன செய்வது என்று ஒருவர் கேட்கிறார் [21]. நடத்தை கெட்ட பெண் என்று சொல்லும்போது பெரும்பாலும் ஒழுக்க ரீதியிலே தவறு விடக்கூடிய அந்நிய ஆண்களோடு தகாத தொடர்பு வுகளையும் உறவுகளையும் வைக்கக்கூடிய பெண்களை அது குறிக்கிறது இவ்வாறான பெண்களை எந்த ஒரு ஈமானுள்ள ரோஷமுள்ள கணவனும் பொரிந்தி கொள்ள மாட்டான் [22]. அதனால்தான் சத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சொன்னார்கள் என்னுடைய மனைவியோடு வேறொருவன் இருப்பதை நான் பார்த்தால் அவனுடைய கழுத்தை நான் வெட்டி விடுவேன் என்று சொன்னார்கள் [22]. ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அங்க இருந்தவர்களிடம் சொன்னார்கள் சதுடைய ரோஷத்தை பாருங்கள் அவருடைய ரோஷத்தை பாராட்டுகிறார்கள் [22]. அல்லாஹ்வும் ரோஷப்படக்கூடியவன் நானும் ரோஷப்படக்கூடியவன் சதும் ரோஷப்படுகிறார் என்று சாது ரலியல்லாஹு அவர்களுடைய அந்த ரோஷத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்த்தினார்கள் பாராட்டினார்கள் என்பதை அந்த ஹதீஸிலே நாம் பார்க்கிறோம் [22].

எனவே ஒவ்வொரு நல்ல கணவனும் நிச்சயமாக தன்னுடைய மனைவி நிறைபுரள்வதை நடத்தை கெட்டு போவதை ஏற்றுக்கொள்ள மாட்டான் என்பதுதான் உண்மையாகும் [23]. ஒரு மனிதர் தன்னுடைய மனைவி நடத்தை கேட்டு போகிறாள் என்பதை கண்டால் முதலிலே அந்த மனிதன் அந்த பெண்ணுடைய விஷயத்தில் சில வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் குறிப்பாக சூரத்து நிஸா நான்காவது அத்தியாயத்தில் 34வது வசனத்தில் அல்லாஹுத்தஆலா சொல்லும்போது வல்லாத்ததான்ன உங்களுக்கு கட்டுப்படாமல் போய்விடுவார்கள் என்று நீங்கள் பயப்படக்கூடிய உங்களுடைய மனைவிமாரை பொறுத்தவரையில்ஃுஹுன்ன அவர்களுக்கு நீங்கள் நல்ல உபதேசம் செய்யுங்கள் [23]. அவர்களை அழைத்து உட்கார வைத்து கவுன்சிலிங் செய்வது அவர்களுக்கு நசிஹத் செய்வது இந்த நடத்தை தவறானது என்பதை அவர்களுக்கு உணர்த்துவது [23]. இதற்கும் அவர்கள் கட்டுப்பட்டு வரவில்லை என்றால் மவாஜ படுக்கைகளில் அவர்களை பிரிந்து உங்களுடைய கோபத்தையும் கவலையும் டுத்துங்கள் அதற்குப் பிறகு வதுரிபுன்ன அதோடு சேர்த்து நீங்கள் அவர்களுக்கு அடியுங்கள் இந்த மூன்று கட்டங்களையும் நீங்கள் தாண்டிய பிறகும் அந்த பெண்கள் தங்களுடைய நிலைப்பாட்டை மாற்றாமல் இருந்தால் நீங்கள் அவர்களை பிரிவதற்கு தலாக் சொல்வதற்கு உங்களுக்கு அனுமதி இருக்கிறது என்பதை அல்லாஹுத்தஆலா குர்ஆனிலே சொல்கிறான் [24]. அவர்கள் கட்டுப்பட்டு விட்டால் அல்ஹம்துலில்லாஹ் அவர்களை ஏற்று அவர்களோடு வாழலாம் என்பதுதான் இஸ்லாம் காட்டக்கூடிய வழிமுறையாக இருக்கிறது [24].

அதே நேரத்தில் ஒரே அடியாக ஒரு மனிதன் தன்னுடைய மனைவி நடத்தை கட்டு போவதை நேரடியாக பார்க்கிறான் என்று சொன்னால் அவளை பிரிவதற்குரிய உரிமையும் அவனுக்கு இருக்கிறது என்பதை நாம் மார்க்க ரீதியிலே புரிந்து கொள்ள முடிகிறது [24]. அதே நேரத்தில் சில ஆண்கள் இருக்கிறார்கள் மனநோயாளிகள் எடுத்ததற்கெல்லாம் சந்தேகப்படுகிறவர்கள் மனைவி மீது அவதூர்களை பரப்ப கூடியவர்கள் தேவையில்லாமல் குற்றச்சாட்டுகளை வைக்க கூடியவர்கள் இவர்களை பொறுத்தவரையில் இவர்கள் நல்ல மருத்துவர்களை பார்க்க வேண்டியவர்கள் அதே நேரத்தில் அல்லாஹ்விடத்தில் துவா செய்து தங்களிடம் வரக்கூடிய அந்த வஸ்ுவாசை அந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ள அவர்கள் முயற்சி செய்ய வேண்டும் [25]. இவர்கள் மனைவி மீது வீண் பழியை சுமத்துவார்களாக இருந்தால், இவர்களுடைய விஷயத்தில் அல்லாஹுத்தஆலா லியான் அல்லது முலா என்று சொல்லக்கூடிய ஒரு சட்டத்தை, இறக்கி வைத்திருக்கிறான் [25]. மனைவி மீது அவதூறு சொல்வது இன்னாரோடு நீ தவறாக நடக்கிறாய் என்று குற்றம் சாட்டுவது [25]. இதை மனைவி மறுக்கிற போது இரண்டு பேரும் ஒரு காதி இடத்திலே வந்து அந்த காவிக்கு முன்னால் சத்தியம் செய்ய வேண்டும் [25]. நான்கு தடவைகள் அவர் சத்தியம் செய்வார் [25]. நான் சொல்வது உண்மை [25]. என்னுடைய மனைவி நடத்தை கெட்டவள் இன்னாரோடு இப்படி நடந்து கொள்கிறாள் இது அல்லாஹ் மீது சத்தியம் என்று நான்கு தடவைகள் அவர் சத்தியம் செய்துவிட்டு ஐந்தாவது தடவை இந்த விஷயத்தில் நான் பொய்யனாக இருந்தால் என் மீது அல்லாஹ்வுடைய சாபம் உண்டாகும் என்று அவர் சொல்ல வேண்டும் [26]. இதற்கு லியான் முலா என்று சொல்லப்படும் [26]. இதற்குப் பிறகு அவர்களுடைய குடும்ப வாழ்க்கை பிரிந்துவிடும் [26]. எனவே அன்புள்ள சகோதர சகோதரிகளே ஒரு பெண் தன்னுடைய மனைவி நடத்தை கெட்டவள் என்பது ஒரு கணவனுக்கு தெரிந்தால் முடியுமானவரை அவளுக்கு நசிக செய்து இஸ்லாம் சொல்லக்கூடிய வழிமுறைகளை பேணி அவளை திருத்துவதற்கு முயற்சி செய்ய வேண்டும் [26]. இல்லாத பட்சத்தில் அவளை தலாக் சொல்வதற்கு அந்த கணவனுக்கு உரிமை இருக்கிறது [26]. வல்லாஹுத்தஆலா ஆலம் [26].

← முந்தையஅடுதது →