அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ அல்ஹம்துலில்லாஹ் வஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அலா ரசூலில்லாம் தாவா பணியில் ஈடுபடும் போது சோதனைகள் ஏற்பட்டால் மனச்சோர்வு விரக்தி ஏற்படுகிறதே இதிலிருந்து மீழ்வதற்குரிய வழி என்ன என்கிற ஒரு கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது [13]. அன்புள்ள சகோதர சகோதரிகளே சத்திய மார்க்கமாகிய இஸ்லாத்தை அல்லாஹுத்தஆலா நமக்கு மார்க்கமாக தந்திருப்பது மிகப்பெரிய ஒரு அருட்கொடையாகும் [13]. இந்த அருட்கொடைக்கு எவ்வளவுதான் நாம் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தினாலும் அது ஈடாக மாட்டாது [13]. இதனுடைய பிரதிபலனை இந்த உலகத்திலே நாம் அனுபவிக்கிற அதே நேரத்தில் நிச்சயமாக மறுமையிலே மிக தெளிவாக அனுபவிக்கும் போதுதான் நமக்கு புரியும் [13]. இந்த மார்க்கத்தை நாம் சரியாக புரிந்து வைத்தி அதே நேரத்தில் அதை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வது நம் மீதுள்ள ஒரு பெரிய பொறுப்பாக இருந்து கொண்டிருக்கிறது [13]. இந்த மார்க்கத்தை பின்பற்றுகிற போதும் இதை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்கிற போதும் பல சோதனைகளும் துன்பங்களும் கஷ்டங்களும் வருவது என்பது இயல்பான ஒன்றாகும் [13].
இந்த உலகத்தில் முதல் ரசூலாக வந்த நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் முதற்கொண்டு இறுதித்தூதர் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரைக்கும் எல்லா தூதர்களுமே இந்த மார்க்கத்தை ஏற்றுக் கொண்டதற்காகவும் பின்பற்றியதற்காகவும் போதனை செய்ததற்காகவும் கடுமையான சவால்களுக்கும் சோதனைகளுக்கும் உள்ளாக்கப்பட்டார்கள் என்பதை, அல்குர்ஆனும், ஹதீஸும் நமக்கு எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கின்றன [14]. இருந்தாலும் கூட, எவ்வளவு சவால்களை அவர்கள் சந்தித்த போதிலும், அவர்கள் இந்த மார்க்கத்தை விட்டுக் கொடுக்கவில்லை [14]. மார்க்கத்திலே மிக உறுதியாக அவர்கள் இருந்த அதே நேரத்தில், இந்த மார்க்கத்தை எத்தி வைப்பதிலும் அவர்கள் பின்வாங்கவில்லை என்பதை நாம் எல்லோரும் கவனத்திலே கொள்ள வேண்டும் [14]. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அவர்களுடைய 40 ஆவது வயதில், நபியாக ஆக்கப்படுகிறார்கள் [14]. அதிலிருந்து, ஒரு சில வருடங்களிலே, இந்த மார்க்கத்தை பகிரங்கமாக எத்தி வைக்க வேண்டும் என்கிற ஒரு கட்டளை அவர்களுக்கு அல்லாஹ்வுடைய புறத்திலிருந்து வருகிறது [14].
மார்க்கத்தை பகிரங்கமாக அவர்கள் போதிக்க ஆரம்பித்ததிலிருந்து அவர்கள் பல்வேறு சவால்களை சந்தித்தார்கள் பல்வேறு சோதனைகளை அவர்கள் எதிர்கொண்டார்கள் கடுமையான நிந்தனைகளுக்கு உள்ளாக்கப்பட்டார்கள் அவர்களை அல்அமீன் அசாதிக் என்று சொன்னவர்கள் அவர்களைப் பார்த்து சூனியக்காரன் என்றார்கள் பைத்தியக்காரன் என்றார்கள் பொய்யன் என்றார்கள் சமூகத்தை சீர்குலைக்க வந்தவர் என்று சொன்னார்கள் [15]. அதனோடு நிறுத்தாமல் அவர்களை கிண்டல் செய்தார்கள் கேலி செய்தார்கள் [15]. அவர்களை நையாண்டி செய்தார்கள் அவர்களைப் பார்த்து கேவலமாக சிரித்தார்கள் [15]. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த மார்க்கத்தை போதிக்கிற போது, அவர்களுடைய சத்தம் மக்களுக்கு கேட்கக்கூடாது என்பதற்காக வேண்டி, அவ்விடங்களிலே போய் நின்று சத்தமிடுவார்கள் [15]. அவர்களுடைய பிரச்சாரத்தை தடுத்து நிறுத்துவதற்காக வேண்டி பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டார்கள் [15]. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அல்லாஹ்வினால் அருளப்பட்ட வஹியாகிய அல்குர்ஆனை விமர்சனம் செய்தார்கள் [15]. கேலி செய்தார்கள் [15].
யூதர்களோடு தொடர்பு கொண்டு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை இழிவுபடுத்துவதற்கான முயற்சிகளை எல்லாம் மேற்கொண்டார்கள் [16]. இவ்வாறு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டவர்கள் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அல்லாஹ்வுடைய தூதர் தன்னுடைய பயணத்திலே சோர்வடையாமல் நம்பிக்கையோடும் நிதானமாகவும் அவர்கள் பயணித்துக் கொண்டிருப்பதை பார்த்தவர்கள் இன்னும் ஆத்திரம் கொண்டு அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை உடலியல் ரீதியாக நிந்திக்க ஆரம்பித்தார்கள் [16]. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய கழுத்தை நெரித்தார்கள் கண்ணத்தில் அடித்தார்கள் ஒரு கட்டத்தில் காரை உமிழழ்ந்தார்கள் [16]. உமிழழ்நீர் அவர்களில் படவில்லை என்று வரலாற்று ஆசிரியர்கள் சொல்கிறார்கள் [16]. முகத்திலே காரை உமிழழ்ந்தார்கள் [16]. தொழுது கொண்டிருக்கும் போது அவர்களுடைய பிடரியிலே செத்து அழுகி போயிருந்த ஒட்டகத்தின் குடல்களை கொண்டு போய் போட்டு அவர்கள் சுஜூதிலே மூச்சு திணறிய போது இவர்கள் டான்ஸ் ஆடி கூத்து போட்டார்கள் [16]. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய, தலைக்கு விலை பேசினார்கள் [16]. அவர்களுடைய உயிருக்கு அச்சுறுத்தலாக இருந்தார்கள் [16].
அவர்களை ஏற்றுக் கொண்ட தோழர்களை சஹாபாக்களை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய கண் முன்னாலேயே கடுமையான கொடுமைகளுக்கும் சித்திரவதைகளுக்கும் உள்ளாக்கினார்கள் [17]. ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தையும் சமூக பிரஷ்டங்கம் செய்தார்கள் [17]. அதாவது ஊரை விட்டு ஒதுக்கி வைத்தார்கள் [17]. இவ்வாறு வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அளவுக்கு துன்பங்களையும் துயரங்களையும் கஷ்டங்களையும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் அவர்களுடைய தோழர்களுக்கும் கொடுத்துக் கொண்டிருந்தார்கள் [17].
ஆனால் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் சஹாபாக்களும் இந்த மார்க்கம் அல்லாஹ்வினால் நமக்கு கிடைத்த ஒரு கிப்ட் என்பதை மிகப்பெரிய ஒரு பாக்கியம் என்பதை அவர்கள் புரிந்து கொண்டதனாலும் இந்த மார்க்கம் அல்லாஹ்வுடைய மார்க்கம் என்பதிலே தெளிவாக இருந்ததுனாலும் இந்த மார்க்கத்தை பின்பற்றினால்தான் இந்த உலகத்தில் ஒரு சரியான மனிதனாக வாழலாம் என்பதை புரிந்ததனாலும் இந்த மார்க்கத்தின் அடிப்படையில் வாழ்ந்தால்தான் மறுமையில் வெற்றி அடையலாம் என்பதை ஈமான் கொண்டிருந்ததனாலும் அவர்கள் இவ்வளவு சோதனைகளுக்கும் கஷ்டங்களுக்கும் மத்தியில் விரக்தி அடையவில்லை மனச்சோர்வு அடையவில்லை இந்த பணி இருந்து ஒதுங்கவில்லை என்பதை நாம் கவனத்திலே கொள்ள வேண்டும் [18]. இவ்வாறு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சஹாபாக்கள் அதற்கு பின்னால் வந்த தாபியீன்கள் தபதாபியீன்கள் இமாம்கள் இந்த மார்க்கத்தில் எவ்வளவு பற்றோடு இருந்தார்கள் [18].
சோதனைகளுக்கும் சவால்களுக்கும் பிரச்சனைகளுக்கும் மத்தியிலே அவர்கள் எப்படி உறுதியோடு இருந்தார்கள் என்கிற வரலாறுகளை நாம் அடிக்கடி படிக்கிற போது, அன்புள்ள சகோதர சகோதரிகளே, நாமும் வாழுகிற காலத்தில், இந்த மார்க்க விஷயத்தில் நமக்கு ஏற்படுகிற சோதனைகள் கஷ்டங்கள் நமக்கு பிரக்தியை தர மாட்டாது என்பதை நாம் புரிய வேண்டும் [19]. அல்லாஹ்வுக்காக என்கிற இகலாசோடு இந்த பாதையில் பயணித்தால் நிச்சயமாக நாம் சோர்வில்லாமல் ஒதுங்காமல் பயணிக்கலாம் [19]. அல்லாஹ் ஜல்லஷானஹுத்தஆலா நம் அனைவருக்கும் அதற்கு தவபீக் செய்ய வேண்டும் [19]. அதேபோல இந்த மார்க்கத்தை நல்ல முறையிலே கற்று புரிந்திருக்கிற உலமாக்கள் தாயிகளுக்கும் பிரச்சனைகள் சோதனைகளை எதிர்கொண்ட நிலையில் இந்த மார்க்கத்தை மக்கள் மத்தியிலே கொண்டு சேர்க்கிற பாக்கியத்தை வழங்க வேண்டும் என்று பிரார்த்தித்து விடைபெறுகிறேன் அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன் வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ [19].