Dr. ஷேக் முபாரக் மதனி

சீட்டு போடுவது (சீட்டுப் பிடித்தல்) மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதா? மோசடியான சீட்டு முறைகள் எவை?

சீட்டு வியாபாரம் மோசடி வட்டி

← முந்தையஅடுதது →
கேள்வி
சீட்டு போடுவது (சீட்டுப் பிடித்தல்) மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதா? மோசடியான சீட்டு முறைகள் எவை?
பதில்
பதில்:

சீட்டு என்ற ஒரு முறை அதை அரபியிலே ஜம்மியா என்று சொல்வார்கள் [26]. இந்த சீட்டு போடக்கூடிய ஒரு நடைமுறை பொதுவாக உலகம் முழுக்க இருக்கக்கூடிய ஒன்றாகும்; 10 பேர் 25 பேர் சேர்ந்து மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை சேர்ப்பது, ஒன்றில் புரிந்துணர்வின் அடிப்படையில் அதை பிரித்துக் கொள்வது அல்லது குழுக்கல் முறையில் அந்த சீட்டை எடுத்துக்கொள்வது [26]. இந்த சீட்டு போடுவது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதா என்று கேட்டால் மார்க்கத்தில் அதற்கு தடை கிடையாது [26]. அல்லாஹுத்தஆலா அல்குர்ஆன் சொல்லும்போது நல்ல விஷயங்களிலும் தக்குவாவோடு தொடர்பான விஷயங்களிலும் ஒருவருக்கொருவர் நீங்கள் ஒத்துழைப்பாக இருங்கள் என்று சொல்கிறான் [26]. உண்மையிலே இது ஒருவர் தன்னுடைய பொருளாதாரத்தை சேமிப்பதற்கு, அதேபோல அவர் தன்னுடைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு ஒரு நல்ல வழியாக இருப்பதனால் இந்த சீட்டு முறை மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கிறது [26].

அதே நேரத்தில் சீட்டினுடைய சில வடிவங்கள் இருக்கின்றன; அந்த வடிவங்களில் சில வடிவங்கள் இஸ்லாத்தில் அனுமதிக்கப்படாதவை [26]. உதாரணமாக சில ஊர்களில் ஏலச்சீட்டு என்று சொல்வார்கள் [27]. ஒரு பத்து பேர் சேர்ந்து ஒரு லட்சம் ரூபாய் வருகிறது என்றால் அந்த ஒரு லட்சத்தை வைத்துக்கொண்டு ஏலம் போடுவார்கள் [27]. இதிலே யார் குறைந்த அளவு கேட்கிறாரோ அவருக்கு அந்த சீட்டு போய் சேரும் [27]. இப்ப இதிலே அநியாயமாக மற்றவர்களுடைய பணத்தை சாப்பிடுதல் என்ற ஒரு பாவமான காரியம் இருப்பதனால் இந்த சீட்டு கூடாது [27].

அடுத்ததாக இன்னும் சில இடங்களிலே சீட்டு பிடிக்க கூடிய ஒருவர் (கோஆர்டினேட் பண்ணக்கூடியவர்) இருப்பார்; அவர் முதலாவது சீட்டை எடுத்துக் கொள்வார் [27]. 10 பேர் சேர்ந்து ஒருவருக்கு 1000 ரூபா வீதம் போடுவார்கள், ஆனால் இந்த சீட்டு பிடிக்கிறவர் 1000 ரூபா போடாமல் அவர் ஒரு சீட்டை எடுத்துக் கொள்வார் [27]. சீட்டுலே இணைந்திருக்க கூடியவர்கள் சீட்டு முடிகிற போது 10,000 ரூபா கட்டி இருப்பார்கள், ஆனால் அவர்களுக்கு கிடைக்கக்கூடிய தொகை 9000 தான் [27]. 1000 ரூபாவை சீட்டு ஏற்பாடு செய்கிறவர் எடுத்துக் கொள்கிறார் [27]. இதை பொறுத்தவரையில் இது ஒரு புரிந்துணர்வின் அடிப்படையில் நடந்தால் (அதாவது இந்த 10 பேரும் சேர்ந்து விரும்பி ஒரு சீட்டை தந்தால்) இது தடையில் இல்லை [28]. ஆனால் சில இடங்களில் நிர்பந்தமாக அந்த பணத்தை எடுத்துக் கொள்வதை பார்க்கிறோம்; அவ்வாறு நிர்பந்தமாக அவர் ஒரு தொகை பணத்தை ஒவ்வொரு தடவையும் எடுப்பாராக இருந்தால் நிச்சயமாக அது ஹராமான பணமாகும் [28]. அல்லாஹுத்தஆலா அல்குர்ஆனிலே உங்களுக்கு மத்தியில் தவறான முறையில் பொருளாதாரத்தை சாப்பிடாதீர்கள் என்று எச்சரிக்கக்கூடிய அந்த குர்ஆன் வசனத்தின் அடிப்படையில், இவர் ஹராமாக சாப்பிடக்கூடிய பணமாக அது அமைந்துவிடும் [28].

← முந்தையஅடுதது →