Dr. ஷேக் முபாரக் மதனி

குழந்தை பிறந்ததும் அதன் வலது காதில் அதானும், இடது காதில் இகாமத்தும் கூறக்கூடிய நடைமுறை ஆதாரப்பூர்வமானதா?

குழந்தை அதான் இகாமத் தஹ்னீக்

← முந்தையஅடுதது →
கேள்வி
குழந்தை பிறந்ததும் அதன் வலது காதில் அதானும், இடது காதில் இகாமத்தும் கூறக்கூடிய நடைமுறை ஆதாரப்பூர்வமானதா?
பதில்
பதில்:

குழந்தை பிறந்ததும் அதன் காதில் அதான், இகாமத் சொல்வது தொடர்பாக இமாம்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஹனஃபி, ஷாஃபி, ஹம்பலி போன்ற மத்ஹபைச் சேர்ந்த அறிஞர்கள் இது சுன்னத் என்று கூறுகிறார்கள். ஆனால், இதை ஆய்வு செய்த ஹதீஸ்கலை அறிஞர்கள், வலது காதில் அதானும், இடது காதில் இகாமத்தும் சொல்வது பற்றி அபுயஅலா முஸ்தனதில் வரும் ஹதீஸ், 'இட்டுக்கட்டப்பட்ட (மவ்ழூஆன) செய்தி' என ஷெய்க் நாசிருத்தீன் அல்பானி (ரஹ்) போன்ற அறிஞர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். எனவே, இவ்வாறு செய்வது கூடாது.

அதேபோன்று, குழந்தை பிறந்ததும் காதில் 'அதான்' மட்டும் சொல்ல வேண்டும் என்று சுனன் அபூதாவூத், திர்மிதியில் வரக்கூடிய ஹதீஸும் பலவீனமானது (ழயீஃப்) என்பதை அறிஞர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். எனவே, அதான் மற்றும் இகாமத் சொல்வது மார்க்கத்தில் உறுதியானது அல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

அதே நேரத்தில், சஹீஹான ஹதீஸ்களின்படி, குழந்தைகள் பிறந்தால் அவர்களுக்காக பரக்கத்தை வேண்டி துஆ செய்வதும், அவர்களுக்கு 'தஹ்னீக்' செய்வதும் வலியுறுத்தப்பட்ட சுன்னத்தாகும். தஹ்னீக் என்பது, பேரீச்சம்பழம் போன்ற இனிப்பான ஒன்றை நன்றாக மென்று, குழந்தையின் நாவில் தடவி விடுவதாகும். எனவே, இந்த ஆதாரப்பூர்வமான நடைமுறையை மட்டுமே நாம் பின்பற்ற வேண்டும்.

← முந்தையஅடுதது →